தூக்கு கயிறும் உன் கூந்தலாக மாறுதடி 555

பெண்ணே...

பூக்களை பறித்த பின்னே
நந்தவனம் சருகானது...

உன்னை பிரிந்த தருணம்
எல்லாமே எனக்கு இருட்டானது...

என்னை ஏளனமாக
பார்த்தவளே...

என் கனவிலும் வந்து
கத்தி வைக்காதடி...

நிமிடம் கூட உன்னை
மறக்க முடியாமல்...

நான் தினம்
தவிக்கிறேனடி...

பூச்சி கொல்லிகளை
கையில் எடுத்தாலும்...

உன் பூ முகம் வருதடி
என் கண்முன்னே...

தூக்கு மாட்டிக்கொள்ள
நினைத்தாலும்...

தூக்கு கயிறுகூட
உன் கூந்தலாக தெரியுதடி...

தண்டனைக்கு
தப்பியவன்...

தோற்று கொண்டே
இருக்கிறேன்...


என் மரணத்தை கூட
அணைக்க முடியாமல்...

உன்னால்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (16-Jun-14, 8:52 pm)
பார்வை : 280

மேலே