அறிமுகத்தில் அவள்களும் அவன்களும்

மெக்காலே கல்வி முறையில்
அறிவியல் என்றும் வரலாறு என்றும்
எழுதப்பட்ட புனைவுகளின்
தொகுப்புகளைக் கடந்து
எனது வாசிப்புக்கு
வாழ்வியல் புனைக்கதைகளையும்
உண்மைக் கதைகளையும்
அறிமுகப்படுத்திய அவள்களும்...

எங்களின் முதல் ரயில் பயணத்தில்
பொன்னியின் செல்வன் வழி
கல்கியை புதியதாகவும்
விகடனை வேறு கோணத்திலும்
வரும் நாட்களில் சுஜாதாவையும்
சிறு குறு நாவல்களையும்
அறிமுகப்படுத்தி விட்டு
இன்றும் இணையத்தின் வாயில்களை
பகிர்ந்து கொள்ளும் அவனும்...

இந்திய ஆங்கில நாவல்களையும்
கவிதைகளையும் கதைகளையும்
என் பசியாற கொடுத்த
இவனுமென.....
அவள்களும், இவன்களும்
என்றென்றும் நிறைந்து கிடக்கின்றனர்
கண்மூடிக் கனவிலிருக்கும்
பொழுதுகளில்........

எழுதியவர் : பாவூர் பாண்டி (16-Jun-14, 11:39 pm)
பார்வை : 128

மேலே