உலக இசை தினம்

இசையால் இதயம் வசமாகும்
இசையும் இறைவன் அருளாகும்

இசையே செவிக்கு விருந்தாகும்
இசையும் பிணிக்கு மருந்தாகும்

இசைதான் வலிக்கு ஒத்தடமாகும்
இசையும் வழிக்குத் துணையாகும்

இசையே தனிமையை சுகமாக்கும்
இசையால் வாழ்வே வரமாகும் ....!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (21-Jun-14, 3:11 pm)
Tanglish : ulaga isai thinam
பார்வை : 458

மேலே