வருவாயா நீரோடை அருகினிலே

முல்லைப்பூ தேனெடுத்து முழுநிலவின் பாலெடுத்து
மெல்லியதென் றல்காற்றின் மென்குளிரால் உனைவரைந்த
நல்லோவி யம்தன்னை நீபார்த்து ரசிப்பதற்கு
நல்மனமே வருவாயா நீரோடை அருகினிலே

----ஒரே அடிஎதுகை அடிதோறும் காய் வாபாட்டுடை
1 3 ஆம் சீர் மோனையும் அமைந்த கலிவிருத்தம்

முல்லைப்பூ தேனால் முழுநில வின்பாலால்
மெல்லியதென் றல்காற்றின் மென்குளிரால் நான்வரைந்த
நல்லோவி யத்தினை நீரோடை பூங்கரையில்
நல்மனமே வந்துபார் நீ

---ஒரு விகற்ப இன்னிசை வெண்பா
எதுகை மோனை அழகுடன்

எழுதியவர் : கவின் சாரலன் (27-Sep-24, 2:42 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 3

மேலே