மீண்டும் வானம்பாடி
மீண்டும் வானம்பாடி
===================
கஞ்சியுண்டும் சிறகடித்த வானம்பாடிகள் நாங்கள்
வருமானம் தேடி மானத்தை இழந்தவர்கள்....
பத்திரங்களில் கையெழுத்திடுகையில் அறிந்திருக்கவில்லை
பணி என்னவென்றும், சிறகுகள் பறிக்கப்படுமென்றும்....
சிவப்பு வீதிகளில் இன்ப தொழிற்சாலைகளில்
உற்பத்தி இயந்திரங்களாய் நாங்கள் ஓய்வின்றி ...
கவனக் குறைவுகளில் சிசுக்கொலைகள் அவ்வப்போது
கருப்பைகளை ரணமாக்கி வலிகளை சுமந்து...
எங்களின் தொழில் தண்டனைகளற்ற குற்றங்களாகிறது
அதிகாரிகளுக்கு ஓசியில் தாசிகளாய் இருக்கையில்...
இருட்டுலகில் விருப்பமின்றி விலைபோகும் எங்களுக்கு
இரவு இரவாகவும்... பகல் பகலாகவும். ஆவதெப்போது??
பறிக்கப்பட்ட சிறகுகளை மீட்டுத் தாருங்கள்
மீண்டும் வானம்பாடியாகிறோம் கஞ்சியேனும் உண்டு...
விபச்சாரிகளாய் வாழ்வை தொடரும் எண்ணமில்லை
வாழ விடுங்கள் எங்களையும் சராசரிகளாய்...