அவள் அப்படித்தான் - போட்டி சிறுகதை

அவள்அப்படித்தான்
****************************************
வீடெங்கும் ஒரே பரபரப்புடன் சுற்றிக்கொண்டு இருந்தாள் முத்துலெட்சுமி…. தன் மகள் நிரல்யாவின் முதல் பெண்பார்க்கும்படலம் என்பதால்…. ஏங்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கிளம்பிட்டாங்களா?????? எப்பவராங்க?? எதாவது அலைப்பேசி-ல தொடர்புகொண்டீங்களா????.....

ஒரு வித எரிச்சலுடன் அவள் கணவன் பழனி இன்னும் இல்லை……அவுங்க சாயங்காலம் 4-மணிக்கு தான் வருவாங்க-னு நேத்தே சொன்னாங்கள அப்புறம் எதுக்கு சும்மா சும்மா அலைப்பேசி-ல அவுங்கள தொந்தரவு செய்யனும்…கிளம்பும் போது அவுங்களே பண்ணுவாங்க…

அந்நேரம் அங்கு வந்த நிரல்யா சரியா சொன்னீங்க அப்பா…இந்த அம்மா காலை-ல இருந்து வீடே இரண்டு பண்ணிட்டு இருக்காங்க…..என்னமோ இன்னைக்கே கல்யாணம் நடக்க போறமாறி…

அதைக்கேட்ட முத்துலெட்சுமி ஆவேசத்துடன் அப்பாவும்,பொண்ணும் சேந்துட்டீங்களா…. இனி நா சொல்லுறத எங்க கேட்க போறீங்க…. என்னமோ செய்யுங்க…..

அம்மா நா என் தோழி வீட்டுக்கு போய்ட்டு மதியம் தான் வருவேன்….

என்ன விளையாடுறீயா?? இன்னைக்கு எங்கையும் போககூடாது…. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வராங்க…. அத மனசுல வச்சுக்கோ….

பாருங்க அப்பா அவுங்க சாயங்காலம் தான வராங்க… இப்ப காலை தானே…. மதியம் வந்துடுவேன்…. அம்மாக்கு எடுத்து சொல்லுங்க அப்பா….

சரி விடு முத்துலெட்சுமி கொஞ்சநேரம் போய்ட்டு வரட்டும்… நிரல்யா அப்படியே உன் தோழி நிலாவை கூட்டிட்டு வா மா…. சாயங்காலம் உனக்கு ஒத்தாசையா இருக்கும்…. அப்பானா அப்பாதான்… சரிஅப்பா… கண்டிப்பா கூட்டிட்டுவரேன்….தன்னுடைய வாகனத்தை வேகமாக எடுத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டாள்…..

நேரம் நெருங்கிக் கொண்டே இருந்தது நிரல்யா வரவே இல்லை…கடிகாரத்தின் பெரிய மற்றும் சின்ன முள் 4-ல் சரியாக நின்றவுடன் மணி டங் ட ங் டங் என்று ஒலித்தது…… அந்த ஒலியின் அதிர்வு முத்துலெட்சுமியை மேலும் பதட்டம் ஆக்கியது…அவளின் இதயத்தில் யாரோ அடிப்பது போல் உணர்ந்தாள்…. என்னங்க இன்னும் நம்ம பொண்ணக்காணோம் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வேற வந்துடுவாங்க… இதுக்குதான் சொன்னேன் அவள அனுப்பாதிங்க-னு சொன்னா கேட்டீங்களா….. அவளுக்கு இதுல கொஞ்சம் கூட இஷ்டம் இல்ல….அதான் இப்படி பண்ணுறா….

இப்ப எதுக்கு கவலைப்படுற…. அதெல்லாம் நம்ம பொண்ணு சொன்னா சொன்னமாறி வந்துடுவா…. இரு நான் அலைப்பேசி-ல பேசுறேன்… எங்க இருக்கானு தெரிஞ்சுடும்…. பழனி அலைப்பேசியை எடுத்து நிரல்யாவை அழைக்கும் போது….வெளியில் இருந்து ஒரு குரல்….அப்பா அப்பா…….

என்னங்க நம்ம பொண்ணு வந்துட்டானு நினைக்குறேன் என்று முத்துலெட்சுமி வேகமாய் வெளியே ஒடினாள்….. வா மா நிலா நிரல்யா எங்க…. இவ்வளவு நேரம் எங்க போனீங்க…. கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா…. எங்கஅவ?????

என்னமா நான் கேட்க வேண்டிய கேள்வி நீங்க கேக்குறீங்க….நிரல்யா எங்க????….எங்க வீட்டுக்கு காலை-ல வரேனு சொன்னா இன்னும் வரலயே என்ன ஆச்சுனு பாத்துட்டுபோலாம்-னு வந்தேன்…..
அப்படியே தலையில் இடி இறங்கியதுப் போல் இருந்தது முத்துலெட்சுமிக்கும்,பழனிக்கும்….. அந்த ஒருநொடியில் அவர்களது எண்ணங்கள் அலைப்பாயத்தொடங்கியது….. தன் மகளுக்கு என்ன நடந்ததோ?? எங்கு இருக்கிறாளோ என்று…. அப்பொழுது அங்கு ஒரு கார் வந்து நின்றது….

மேலும் ஒரு இடி தன் தலையில் இறங்கியதைப்போல் உணர்ந்தால் முத்துலெட்சுமி… வந்திருக்கும் மாப்பிள்ளை வீட்டார்க்கு என்னபதில் சொல்வது என்று தெரியாமல் பேய் முழி விழிக்க சற்று சுதாரித்தவளாய் அவர்களை வரவேற்றாள்
வாங்க வாங்க….என்று நிரல்யாவின் பெற்றோர்கள் அவர்களை வரவேற்றனர்….
அந்த பதட்டத்திலும் அவர்களுக்கு சுடசுட குடுவையில் தேநீர் உடன் பலகாரங்களைப் பறிமாறினாள்….. அப்போது அங்கு வந்த நிரல்யாவின் தந்தை தங்கள் குடும்பத்தைப்பற்றியும் நிரல்யாவைப்பற்றியும் அறிமுகம் கொடுத்துக்கொண்டு இருந்தார்… மாப்பிள்ளைவீட்டாரும் அவர்களைப்பற்றி அறிமுகம் கொடுத்துக்கொண்டு இருக்கையில் அப்பொழுது யாரோ வாசலில் வந்து நின்று வீட்டில் உள்ள அழைப்புமணியை ஒலித்தனர்….
முத்துலெட்சுமி வேகமாய் ஒடிச்சென்று தன் மகளோ என்று பார்க்கையில் சற்று ஏமாந்தவளாக யாரு தம்பி நீ?? என்ன வேணும்……

என் பேரு நிரஞ்சன் …நா தான் மாப்பிள்ளை என்றான்… அப்படியே பேய்முழி முழித்தாள் முத்துலெட்சுமி செய்வதறியாது….
என்ன உள்ள கூப்பிடமாட்டிங்களா என்று நக்கல்செய்தான் நிரஞ்சன்…. சற்று சுதாரித்தவளாய் அப்படிலாம் இல்ல மாப்பிள்ள உள்ள ஒரு பையன் உட்கார்ந்து இருக்காங்க…அவர்தான் மாப்பிள்ளையோ-னு நினைச்சேன்… திடீர்-னு நீங்க வந்து சொன்ன உடனே எனக்கும் ஒன்னும் புரியல … அதான்…. மன்னிச்சுக்கோங்க….
பரவால அத்தை… இதுல என்ன இருக்கு…..நீங்க என் அம்மா மாதிரி உங்கள போய் தப்பா நினைப்பேனா??? அவள் மனம் ஆனந்தத்தில் கூத்தாடியது…. ஒருபக்கம் தன்மகள் இன்னும் வரவில்லையே என்று மனம் குமுறியது… மாப்பிள்ளைக்கு தேநீர் குடுத்து அமரச்செய்தாள்…. பொண்ண கூட்டிட்டுவாங்க –னு மாப்பிள்ளை அம்மா கேட்டவுடன் ஒருவித பதற்றத்துடன் முத்துலெட்சுமி அது வந்து வந்து என்று தயங்கினாள்…
அப்பொழுது இதோ பொண்ணுவந்துட்டாளே என்று மாப்பிள்ளை அப்பா சொல்ல முத்துலெட்சுமி திரும்பிபார்த்தாள்…. அவள் கண்ணை அவளாளே நம்ப முடியவில்லை… நிரல்யா அலங்காரத்துடன் வந்துநின்றாள்…. முத்துலெட்சுமிக்கு இப்பொழுதுதான் உயிர் வந்ததுப்போல் இருந்தது….
அவள் காதருகே வந்த நிரல்யா எப்படி நேரத்துக்கு வந்துட்டேனா இப்பாவது சிரி அம்மா… எப்பபாரு தேவை இல்லாம கவலைப்படுற… முத்துலெட்சுமியின் கண்ணில் ஆச்சிரியத்துடன் அவள் ஆயிரம் கேள்விக்கணைகளுடன் நிரல்யாவை நோக்கினாள்……. நிரல்யாவும் அவளை அமைதிபடுத்தும் விதமாக கண்ணில் சைகை காட்டினாள்…..
பெண்பார்க்கும்படலம் முடிந்தபிறகு அவர்கள் அனைவரும் புறப்பட்டுச் சென்றனர்… .நாங்க நாளைக்கு பதில் சொல்லுறோம் என்று….

அவர்கள் சென்றகணமே அமைதி பொறுக்காதவளாய் எண்ணெய்யில் போட்ட கடுகைப்போல் அவள் கோபக்கணல்களை நிரல்யாவின் மீது வீசினாள்…. நிரல்யா மெளனம் காத்தவளாய் தன் அறைக்குள் நுழைந்து கதவை சாற்றினாள்…. அப்பொழுது மாப்பிள்ளைவீட்டாரிடம் இருந்து அலைப்பேசி ஒலித்தது… ஒருவித பதட்டத்துடன் அதை உயிர்பித்தாள் முத்துலெட்சுமி…சொல்லுங்க என்னவிஷயம்… மறுமுனையில் மாப்பிள்ளையின் அம்மா நாளைக்கே உறுதி பண்ணிடுவோம் எங்களுக்கு பொண்ண ரொம்பபிடிச்சு போச்சு.. இப்படிப்பட்ட நல்ல பொண்ணதான் நாங்க எதிர்பார்த்தோம்… எங்க பையன் உங்க பொண்ணபத்தி இப்ப தான் என்கிட்ட சொன்னான்…அதான் உடனே பேசிட்டேன்…என் மருமகள்-ட குடுங்க நா அவள்-ட பேசனும்…. ஒன்றும் புரியாதவளாய் குழப்பத்துடன் நிரல்யாவின் அறையில் நுழைந்து அலைப்பேசியை அவளிடம் கொடுக்கிறாள்… அவள் பேசி முடித்து அலைப்பேசி தொடர்பை துண்டித்துவிட்ட மறுநொடி தன் தாயின் குழப்பத்தை புரிந்துக்கொண்ட நிரல்யா பேச தொடங்கினாள்.....

அம்மா நா காலை-ல வண்டி-ல போகும் போது சாலை-ல ஒரு வயசான தாத்தா அடிப்பட்டுக்கிடந்தார்… அப்ப அவர யாரும் காப்பாத்தாம அமைதியா வேடிக்க பாத்துட்டு இருந்தாங்க…. என் மனசு பொறுக்கல…. அவர அவசரமா நான் அரசு மருத்துவமனை-ல போய் சேத்தேன்… ஆனா அங்க போய் ரொம்ப நேரம் ஆகியும் யாரும் அவருக்கு முதலுதவி கூட குடுக்கல…. நேரா ஒரு டாக்டர் அறைக்கு போய் செம்மையா திட்டிவிட்டேன்… அப்புறம் அவர் தான் அவரகாப்பத்துனார்…. அதான் இவ்வளவுநேரம் ஆகிடுச்சு அம்மா..அது சரி மாப்பிள்ளை அம்மா ஏதோ சொன்னாங்க அது என்ன எனக்கு புரியல…. அதுவா அது ஒன்றும் இல்ல அந்த டாக்டர் வேற யாரும் இல்ல இன்னைக்கு என்ன பொண்ணுபாக்க வந்த மாப்பிள்ளைதான்….
அப்படியா!!!!!!!!!! நீ வேற திட்டிஇருக்க மாப்பிள்ளை தப்பா நினைக்க போறாரு…. உனக்கு எதுக்கு இந்த ஊரு வம்புலாம்…. ஆமா நீ எப்படி வந்த வீட்டுக்கு …..

அதுவா பின்னாடி சுவர் ஏறி குதிச்சு வந்தேன் அம்மா…. சற்றே கோபத்துடன் முத்துலெட்சுமி நிரல்யாவைப்பார்த்து என்னைக்குதான் இந்த சேட்டை எல்லாம் மூட்டகட்டி வைக்க போற நீ…..
அப்போது அங்கிருந்த நிரல்யாவின் அப்பா……சற்றே புன்னையுடன்….இவ எப்பவுமே இப்படித்தான் மா …எப்பபாரு எதாவது நினைச்சு பயப்படுவா இல்ல கவலைபடுவா இல்ல திட்டுவா….. நீ கண்டுக்காத நிரல்யா…. என் குழந்தை எவ்வளவு பெரிய நல்ல காரியம் பண்ணி இருக்கா பாராட்டாமா சும்மா குத்தம் சொல்லிட்டே இருப்பா…

அப்பாவும்,பொண்ணும் சேந்துட்டீங்களா…. இனி நா சொல்லுறத எங்க கேட்கபோறீங்க…. என்னமோ செய்யுங்க….. என்று சமையல் அறைக்குள் நுழைந்தாள் முத்துலெட்சுமி…..

இதை அனைத்தும் பார்த்த நிலா நிரல்யாவிடம் அம்மா ஏன் இப்படி எப்பபாத்தாலும் கவலைப்படுறாங்க…. அவுங்க உடம்புக்கும் இது நல்லது இல்ல…. நீயும் கொஞ்சம் பொறுப்பா இரு…. ஒரு அலைப்பேசில நீ சொல்லி இருந்தா அம்மா இவ்வளவு கவலைப்பட்டு இருக்கமாட்டாங்கள……

நிலாவைப் பார்த்துக்கொண்டே நிரல்யாவும்,அவள் அப்பாவும் நக்கலாக “அவள்அப்படித்தான் “ என்று ஒருவருக்கு ஒருவர் கூரிக்கொண்டே சிரித்தனர்….அது தான் நிலா எங்க அம்மா இயல்பு…. நான் அலைப்பேசி-ல பேசி இருந்தா மட்டும் கவலைப்படாம இருப்பாங்க-னு நினைக்குறீயா??? எங்கமேல இருக்குற அன்பால இப்படி இருக்காங்க…. அத மாத்தவும் முடியாது… அதுதான் என் அம்மாவோட தனித்துவம்…. அதுவும் ஒரு அழகு….ஒரு குழந்தை மாறி….


------------------------------------------------------------------------------------------முற்றும்---------------------------------------------------------------------------------------

எழுதியவர் : ரம்யா சரஸ்வதி (5-Jul-14, 3:44 pm)
பார்வை : 525

மேலே