கடற்கரையிலே
நீல உடை
தந்தான் வான்
கணவன்.............!
வெட்கத்தில்
சிரிந்தாள் கடல்
மனைவி............!
கரை தொட்டு
விளையாடின
அலை பிள்ளைகள்.........!
கைக்கு பதிலாய்
கால் நனைத்து போகும்
உறவினனாய் நான். ........!
வயிற்றிற்கு பதிலாய்
முழுதாய் நிறைந்து
நிம்மதி தந்த என் மனது.........!
பிரிகையில் அடம்
பிடித்த பிள்ளை
அலைகளின் கண்ணீரில்
உப்பானது என் உடல்......!