லஞ்சன்

லஞ்சமே தஞ்சமென்றடைந்தாயே மனிதா
வஞ்சமே லஞ்சமென என்றுணர்வாய் ?

கொஞ்சும் மஞ்சம் இன்று இருந்திட்டபோதிலும்
நெஞ்சம் கொஞ்சமும் வேண்டுமல்லவா உனக்கு !

அடுத்த தலைமுறை எனும் பிஞ்சுகளின் நிலைமயைப்பார்
அஞ்சிலிருந்து அவை ஆறாகும் நாள் வெகுதூரமில்லை !

மஞ்சுவிரட்டு போல் தோன்றும் உன் இன்றைய நிலை
நஞ்சென்று உன்காலை அது கவ்வும் நாளை !! எனவே மனிதா

லஞ்சமெனும் நஞ்சகற்றி
பஞ்சுபோல் லேசாக்கு உன் நெஞ்சினை
தஞ்சமென்றோர்க்கு தயை புரியும்
பஞ்சகணமெனும் அப்பகவான்
நாளை நிச்சயம் நனவாக்குவான் உன் நியாயக்கனவை !!

எழுதியவர் : கவிரவி (15-Jul-14, 10:45 pm)
பார்வை : 111

மேலே