பணம்பணம்பணம்

பணம்
இருக்கும் போதும்,
இல்லாத போதும்….?
பணம் இல்லாத போது,
அவன் வீட்டில்
உண்கின்றான்;
பணம் இருக்கும்போது,
அவன் உயர்தர உணவகத்தில் உண்கின்றான்.
பணம் இல்லாத போது,
அவன் வேலைக்கு மிதிவண்டியில்
செல்கின்றான்;
பணம் இருக்கும் போது,
அவன் உடற்பயிற்சிக்காக மிதிவண்டி
ஒட்டுகின்றான்.
பணம் இல்லாத போது,
அவன் காலாற நடந்து
சென்று உண்கின்றான்;
பணம் இருக்கும் போது,
அவன் உண்டது செரிக்க நடக்கின்றான்.
பணம் இல்லாத போது,
அவன் தருமம் செய்கின்றன்;பணம் இருக்கும் போது,
அவன் நன்கொடை
கேட்கின்றான்.
பணம் இல்லாத போது,
அவன் பணக்காரனாக நடந்து கொள்கின்றான்;
பணம் இருக்கும் போது,
அவன் ஏழையாக காட்டிக் கொள்கின்றான்.
பணம் இல்லாத போது,
அவன் பங்கு வணிகம் ஒரு மோசடி என்கின்றான்;
பணம் இருக்கும் போது,
அவன் அது நாட்டின் பொருளாதாரம்
என்கின்றான்.
பணம் இல்லாத போது, பணத்தாசை ஒரு பேய் என்கின்றான்;
பணம் இருக்கும் போது,
மேலும்
பணத்திற்காக பேயாய் அலைகின்றான்.
பணம் இல்லாத போது,
உயர் பதவிகள் தனிமையை தருபவை என்கின்றான்;
பணம் இருக்கும் போது, அப்பதவிகளை பெற போராடுகின்றான்.
பணம் இல்லாத போது, சூதாட்டமும் குடியும் கொடுமை என்கின்றான்;
பணம் இருக்கும் போது,
அது உயர் சமூகத்தின் அடையாளம் என்கின்றான்.
பணம் இல்லாத போது,
அவன் நிம்மதியாக இருக்கின்றேன் என்கின்றான்;பணம் இருக்கும் போது,
அவன் நிம்மதியை
தேடுவதாக கூறுகின்றான்.

எழுதியவர் : சதீஷ் (19-Jul-14, 7:48 pm)
பார்வை : 67

மேலே