காஸாவின் கண்ணீர் சபதம்----அஹமது அலி-----

மனிதாபிமான மகான்களே
உங்கள் மனிதத்தை
ஏன் மறந்தீர்கள்?
எங்கே மறைத்தீர்கள்?
எதற்காக என்னிடம் பாராமுகம்?

0---0

முஸல்மானின் உயிருக்கு
உங்கள் மனிதாபிமான சந்தையில்
மதிப்பு இது தானா.?

0---0

எம் குருதியில் குளித்து
எம் உயிருடன் வேடிக்கை காண
அப்படியென்ன சுகம் உங்களுக்கு?

0---0

வரலாறு நெடுகிலும்
சபிக்கப்பட்ட சண்டாளர்களுக்கு
இரக்கம் காட்டியது குற்றம் தான்...

0---0

ஐரோப்பா அடித்து விரட்டியவர்களுக்கு
அடைக்கலம் அளித்ததும்
குற்றம் தான்...

0---0

மழலைகளை பொருக்கியெடுத்து
மண்ணீல் புதைத்து
நாங்கள் குமுறிச் சாக
மெளனங்களை மனதில் புதைத்து
நீங்கள் இருங்கள்!

0---0

எங்கள் பூமியின் காலநிலை
எப்போதும் போர்மேகம்
எங்கும் குண்டு மழை
இடியோசை மிஞ்சும்
உயிரின் கதறல்கள்
பாலை நிலத்திலும் பாயும்
சிவப்பு நதி!

0---0

உலக இஸ்லாமியர்களுக்கு
தினம் ஐவேளைத் தொழுகை
எங்களுக்கு ஆறு வேளை
ஜனாஸா தொழுகையும் சேர்த்து!

0---0

மிருக வதையென்று
வசனங்கள் முழங்கும்
போலி மனிதாபிமானிகளே
மனித இனமே அழிகிறதே
உங்கள் வாயை அடைத்த
கொழுக்கட்டைக்கு என்ன பெயர்?

மனிதாபிமானமா?

0---0

எண்ணெய் வயல்களை கொள்ளையிட
அண்ணன் நடத்திய போருக்கெல்லாம்
தீவிரவாதத்துகெதிரான போரென்று
பொங்கி எழுந்தீர்களே
இஸ்ரேலிய தீவிரவாதத்துக்கு எதிராக
உங்கள் பொங்கல், பொங்காமல்
போனது ஏனோ?

0---0

அடித்துக் கொண்டிருப்பவனும்
அடிமை படுத்துபவனும் ராணுவம்
திருப்பி அடிப்பவன் தீவிரவாதி
ஊடகங்களே உங்கள் தர்மம்
நிலைக்குமென்றா நினைக்கிறீர்கள்?

0---0

நொடிகள் தோறும்
மரணத்தை நேசித்து
விடுதலையை சுவாசிப்போம்

ஈரக் குலைகளை
டாங்கிகள் சிதைத்தாலும்
ஈமானை சிதைக்க
ஒரு காலும் உங்களால் முடியாது
பாவிகளே.!

0---0

உயிரை தந்தவனுக்காய்
உயிரை தருவதற்கு
அஞ்ச மாட்டோம்
எந்த நாய்களிடமும்
கெஞ்ச மாட்டோம்

0---0

போலியாய் மனிதம் பேசி
உங்கள் இனவெறியை
இனம் காட்டிக் கொள்ள
இன்னும் நிறைய சந்தர்ப்பங்கள்
உங்களுக்கு உண்டு!

0---0

குறித்து வைத்துக் கொள்ளுங்கள்
எங்கள் விடுதலையை காணாமல்
இஸ்ரேலின் அழிவை காணாமல்
உலகம் அழிந்து விடாது!


ஜனாஸா தொழுகை=இறந்தவர்களுக்காக செய்யப்படும் தொழுகை.
ஈமான் = இறைநம்பிக்கை

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (21-Jul-14, 10:38 am)
பார்வை : 160

மேலே