இரு மனிதன்
வறுமையெனும் சூரியன் சுட்டெறித்த போதும்...
வற்றாது பெருகுதிங்கே இந்த அதிசய கொடிய நதி...
பசியும் பட்டினியும் நதியாய் புரண்டோடும் ஏழை வாழ்வினிலே -
சொகுசாய் துள்ளி விளையாடும் ஒரு கூட்டம் அந்நதியினிலே ...
உணவில் உப்பில்லை என்றெறியும் ஒரு கூட்டம் வீட்டினிலே-
அதை குப்பையில் தேடி உண்டிடும் மறு கூட்டம் வீதியிலே...
வயற்று உணவிற்காய் ஓடுதிங்கே பெரும் கூட்டம் பாரினிலே-
வயற்றை குறைத்திட ஓடுதிங்கே சிறு கூட்டம் சாலையிலே...
பெற்ற பிள்ளைக்கு பாலில்லை தாயின் மார்பினிலே-
பூனைக்கு பால் வாங்கும் ஒரு கூட்டம் வெளிநாட்டினிலே ..
கல்விக்காய் மூட்டை சுமக்குது ஒரு கூட்டம் நாட்டினிலே-
கல்வியை பண மூட்டைக்கு விற்குது மறு கூட்டம் பள்ளியிலே ...
அரச திட்டங்கள் நூறு இங்கே வறுமையை நீக்கிடவே-
இருந்தும் இல்லாமை என்ற சொல்லே பெருகுகிறது நாட்டினிலே...
இட்ட திட்டமெல்லாம் பட்ஜெட்டில் மாத்திரம் வாழுதிங்கே-
நம் மந்திரி வீட்டினில் செல்லவம் மட்டும் பெருகுதிங்கே ...