மறுபடியும் நீ தாயாக நான்குழந்தையாக...........................


நீ நிலாவை
காட்டி சோறூட்ட வேண்டும்
நான் உன்மார்போடு கட்டி பிடித்து துங்கவேண்டும்
நான் அழும் போதெல்லாம்
பாட்டி வட சுட்ட கதை வேண்டும்
ஏண்டா என்ன இந்த பாடு படுத்துற
என்று என்னை திட்ட வேண்டும்
உன் முந்தானையை
பிடித்துக்கொண்டே உன் பின்
சுற்ற வேண்டும்

நீ வெளியே எங்காவது சென்றால்
நானும் கூட வருவேன் என்று
மண்ணில் உருண்டு அழவேண்டும்
உன் பேச்சு கேட்க்காமல்
அங்கும் இங்கும்
நான் ஓட வேண்டும்
நீ என்னை
துரத்தி துரத்தி பிடிக்க வேண்டும்

உன் கோபத்தால்
என்னை அதட்டவேண்டும்
நான் அதை பார்த்து
அழவேண்டும்

குளிப்பாட்டும் போது
தண்ணீர் பாத்திரத்தை
தரையிலே கவிழ்த்து விடவேண்டும்
அதை பார்த்து அப்படி செய்ய கூடாது
மறுபடியும் அப்படி செய்தால்
பூச்சாண்டி கிட்ட பிடித்து கொடுத்து விடுவேன்
என்று சொல்லி என்னை பயமுறுத்த வேண்டும்

சாப்பாடு வேளையில்
உணவை ஒழுங்கா சாப்பிடாமல்
தூக்கி வீச வேண்டும்
நீ கோபத்தில் என் காதை
பிடித்து திருக வேண்டும்

பள்ளிக்கூடத்தில்
பக்கத்தில் இருக்கும் தோழியின்
ஜடையை பிடித்து இழுத்து
நான் வம்பிழுக்க வேண்டும்
தோழியின் அம்மாவிடம் நீ சமாதானம்
பேச வேண்டும்

பக்கத்து
கோவில் திருவிழாவுக்கு
போகும் போதெல்லாம்
அது வேண்டும் இது வேண்டும்
என்று உன் பின்னே அழுதுகொண்டே
வரவேண்டும்
நீ அதெல்லாம் இப்போ வேண்டாம்
நீ பெரியவனானதும்
அம்மா வாங்கி தரேன் என்று
என்னை ஆறுதல் படுத்த வேண்டும்

எனக்கு பாடம் சொல்லி தரும்போது
வயறு வலிக்கு என்று
நான் பொய்சொல்ல வேண்டும்
நீ இஞ்சி தண்ணீரும் சீனியும் தரவேண்டும்
இஞ்சி தண்ணீரை கொட்டிவிட்டு
சீனியை தின்று உன்னிடம்
அடிவாங்கி அழ வேண்டும்
அதை பார்த்து நீயும் அழுது சரி அழாதடா
அம்மா இனி அடிக்கமாடேன் என்று
என்னை முத்தமிட வேண்டும்

உன்னோடு
ஐஸ் கிரீம் பார்லருக்கு செல்ல வேண்டும்
அங்கே உன்னுடைய
ஐஸ் க்ரிமையும் நானே சாப்பிட வேண்டும்
நீ அதிகமா சாப்பிட்டால் சளிப்பிடிக்கும் என்று
என் தலையில் கொட்ட வேண்டும்

திருமண நிகழ்ச்சிக்கு
செல்லும் போதெல்லாம்
அங்கே உன் மடியில் அமர்ந்துக்கொண்டு
அங்கு நடப்பவைகளைஎல்லாம்
வேடிக்கை பார்க்க வேண்டும்
எனக்கும் இப்பவே கல்யாணம் வேண்டும்
என்று உன்னிடம் சண்டை போடவேண்டும்
நீ ஏண்டா என் மானத்த வாங்கிற என்று
என்னை சமாதானம் செய்ய வேண்டும்

கோவிலுக்கு செல்லும் போதெல்லாம்
உன் கரம் பிடித்து அமைதியாய்
நடக்கவேண்டும்
நீ என் நெற்றியில் திருநீர் பூசி
கோவில் சிலைகளை பார்த்து எனக்கு
கதை சொல்லி தர வேண்டும்

அம்மா நீ ஏன் மறுபடியும் எனக்கு வேண்டும்
என்று கேட்டால் இன்னும் காரணம்சொல்லிக்கொண்டே போகலாம்

மறுபடியும் நீ என் தாயாகவே பிறக்க வேண்டும்
நான் உன் குழந்தையாகவே பிறக்க வேண்டும்

இப்படிக்கு...........................உன் அன்பு மகன்

எழுதியவர் : நந்தி (17-Mar-11, 12:50 pm)
சேர்த்தது : nanthiselva
பார்வை : 442

மேலே