யாசிக்கிறேன்

நான் யாசிக்கிறேன்
நீ யோசிக்காமல் தந்துவிடுகிறாய்

உதடோடு உதடெனினும் உடனே கிடைத்துவிடுகிறது

கிண்டர் ஜாய்க்காக நீ கொடுத்த ஒன்றை
இன்னும் எறும்பு மொய்த்துக் கொண்டிருக்கிறது

எப்போதெல்லாம் நான் உருக்குலைந்து என்னிலிருந்து
சோகம் வடிகிறதோ அப்போதெல்லாம் எம்முனையிலிருந்தும் நிகழ்த்திவிடுகிறாய் முத்தத் தாக்குதல

உன் மென்விரல்களினால் கேசம் கோதி
மீசை முடியோடு விளையாடி
மடியலமர்ந்து நீ தொடுக்கும் வினாக்களில் சில
என் பிம்பத்தின் சுவரை கடப்பாறையால் தகர்த்துவிடுகிறது

துயில் எழும்பாத காலைகளில்
குயில் நீ நெஞ்சிலமர்ந்து கொஞ்சி எழுப்பும் போதும்

வேலை முடிந்து வீடு திரும்பும் தருணங்களில
காலை கட்டியடி ஒரு நொடி கூட நீ
அகல மறுக்கும் போதும் வீணையின் நர்த்தனத்தோடான ்
மெல்லிசை ஒன்று செவிப்பறைகளை மோதுகிறது ்

நீயும் நானும் மட்டும் மேற்கொண்ட அந்த இரவு பயணத்தில் சாலையோரத்தில் அழுது கொண்டிருந்த அச்சிறுவனக்கு நீ யாருக்கும் தராத பொம்மை ஒன்றை கொடுத்துவிட்டுீ சிரித்த போது என் அம்மாவை நினைவூட்டினாய்் செல்ல மகளே!!

எழுதியவர் : kumar (29-Jul-14, 6:24 am)
Tanglish : yaasikkiren
பார்வை : 121

மேலே