கவிதை எனதில்லை
இருவருமே அறியாமல் இடம் மாறிய இதயம்
ஒருவருக்கும் தெரியாமல் உன் தெருவோடும் உள்ளம்
அருகிருக்கும் பொழுது அணைந்து போகும் மூளை
நம் காதல் ஒன்றே என் உயிர் அறிந்த உண்மை
உன் கைப்பையின் ஆழத்தில் மறைத்துக்கொள் என்னை
நிழலொளியின் மயக்கத்தில் அணைத்துக்கொள் நெஞ்சை
எழுத மையில்லை நீ இன்றி
கவிதை எனதில்லை உனதன்றி