தூங்கும் முன் அப்பாவிடம் மகள் கேட்டாள்

மகள் : ஏன் அப்பா கொசு ராத்திரியில மட்டும் நிறைய கடிக்க வருது .....
அது எப்ப அப்பா தூங்கும் .
அப்பா : அது தூக்கம் வரும் போது தூங்கும் ....
மகள் : எப்ப தூக்கம் வருமப்பா ?
அப்பா : அது சாப்பிட்டவுடன் தூங்கும் .........
மகள் : கொசுக்கு வீடு எங்கப்பா ?
அப்பா : அதுக்கு வீடே இல்லை ....
மகள் : ஏம்பா வீடே இல்ல .....
அப்பா : அது ரொம்ப சின்னதா இருக்கே அதான் வீடே இல்ல ........
மகள் : நான் ரொம்ப சின்ன பிள்ளை தானே எனக்கு வீடு இருக்கே .......
அப்பா : இது அப்பா உனக்கு கட்டி தந்தது .
மகள் : அப்போ கொசுவுக்கு அப்பா அம்மா இல்லையா அப்பா .
அப்பா : அந்த அப்பா அம்மா கொசுவும் ரொம்ப சின்னதா இருக்கும் . அதான்
அதுக்கு வீடு இல்ல .
மகள் : கொசுவுக்கு கொசுன்னு யாரப்பா பேர் வெச்சது ?.
அப்பா : கடவுள் ..
மகள் : கடவுளை கொசு கடிக்குமா அப்பா ?
அப்பா : கடிக்காது
மகள் : எனப்பா கடிக்காது ?
அப்பா : கடிச்சா கடவுள் தண்டிப்பாரு .
மகள் : அப்போ கடவுளுக்கு கோபம் வருமா அப்பா ?
அப்பா : வரும். தப்பு செய்தா கடவுள் அடிப்பாரு .
மகள் : கடவுள் நல்லவரா அப்பா ?
அப்பா : ரொம்ப நல்லவர் .
மகள் : அப்புறம் ஏம்ப்பா கொசுவெய் அடிக்குறாரு ?
அப்பா : அது அப்படித்தான் நீ தூங்கு ....
மகள் : கொசு ஏம்ப்பா நம்மளை கடிக்குது ?
அப்பா : அதுக்கு பசிக்குது .........
மகள் :கொசு இட்லி சாப்பிடுமா ?
அப்பா : அதெல்லாம் அதுக்கு பிடிக்காது
மகள் : கொசு கூல்ட்ரிங்க்ஸ் குடிக்குமா ?
அப்பா : வாயை மூடிக்கிட்டு தூங்குடா செல்லம் .
மகள் : ஒரே ஒரு கேள்வி அப்பா
அப்பா : கேட்டுத் தொலை
மகள் : கொசுவுக்கு எத்தனை பல் இருக்கும் ?
அப்பா : அதுக்கு பல்லே இல்ல .
மகள் : பிறகு எப்படி கடிக்கும் ..?
அப்பா : ஐயோ எண்டா உசுர வாங்குற ? இப்ப நீ வாய மூடாட்டி பேய்க்கிட்ட
பிடிச்சு கொடுத்திடுவேன் .
மகள் : பேயை கொசு கடிக்குமா அப்பா ?
அப்பா : இப்ப நீ வாயை மூடிட்டு தூங்க போறியா இல்லையா ?
மகள் : நாங்க தூங்கும் போது வாயும் தூங்குமா அப்பா ?

படிக்க நகைச்சுவையாக இருந்தாலும் மழலைகளின் அர்த்தமற்ற கேள்விகள்
நம்மை மகிழ்விக்கும் .

எழுதியவர் : (10-Aug-14, 9:35 pm)
பார்வை : 606

மேலே