கவிதையல்ல , நிஜம்
என் நகர உழைப்புகள்
எனக்கு பணத்தை
தந்தது.
என் கிராம நினைவுகள்
எனக்கு சந்தோஷத்தை
தந்தது.
' பேசாமல் அங்கேயே
ஏழையாய் இருந்திருக்கலாம் '
நினைத்த போது
மகன் சொன்னான்,
"அப்பா நான்
இன்ஜினியர் ஆவனும் "
மகள் சொன்னாள்
"டாக்டர் ஆவனும் "
மனசு சொல்லிற்று,
'நீ பணக்காரன்
ஆவனும்'.

