ஆவின் பால்
அறத்துப்பால் பொருட்பால் காமத்துபால்
இருந்தும் ஆவின் பாலுக்கு இணையாகுமா !
தாய்பால் இல்லாத மகவுக்கு
உன் பால் அன்றோ முலைப்பால் !
காலைப்பால் இல்லையெனில் காப்பிதான் எங்கே ?
நாள் துவக்கம்தான் துவங்கிவிடுமோ !
தமிழ்ப்பாலானாலும் கவிப்பாலானாலும்
உன்பால் நேசம் குறைந்து விடுமோ !
கன்றுக்கு மட்டு்ம் பால் என்று எண்ணாது
எம்மவர்கும் வழங்கும் காமதேனுவே !
பாரி பேகன் குமணன் அதியமான்
ஓன்றன்பால் கேழ் ஒப்பரோ
பசுமைப் புரட்சிப்பால் போட்டியிட்டு
வெள்ளைப் புரட்சி உண்டாக்கியது உன் பால்
உயிரைக் காப்பதும் உன் பால்
உயிர் போகும் போதும் சங்குப் பால்!
முற்றும் துறந்த முனிபுங்கவரும்
உன்னையுடைமையாக்கி போற்றிப் பணியும் பசுவே !
ஏன் என்பால் இந்த ஈர்ப்பு.