குலோத்துங்க சோழன் கோவை - நூல் - எட்டாவது - பாங்கற் கூட்டம் - 46

அருணாசலக் கவிராயர் எழுதிய குலோத்துங்க சோழன் கோவை
நூல்.

அஃதாவது - மூன்றாநாள் தோழனாற்கூடுங் கூட்டம்; அது: சாரிதல் கேட்டல் சாற்றல் எதிர்மறை நேர்தல் கூடல் பாங்கிற் கூட்டலென ஏழுவகைப்படும்; அவ்வேழுந் தலைவன் பாங்கனைச் சார்தல் முதல் பாங்கிற் கூட்டலீறாகிய இருபத்துநான்கு விரிகளையுடையன; அவை வருமாறு:-

தலைவன் பாங்கனைச் சார்தல்.

பாங்கன் தலைவனை யுற்றது வினாவல்

தலைவ னுற்ற துரைத்தல்.

கற்றறி பாங்கன் கழறல்.

கிழவோன் கழற்றெதிர் மறுத்தல்.

(இ-ள்) பாங்கன் கூறிய உறுதிமொழியைத் தலைவன் மறுத்தல்.
.
கட்டளைக் கலித்துறை

பண்ணாசை பூண்ட குலோத்துங்க சோழன் பதித்த(ஞ்)சைவாய்ப்
பெண்ணாசை யார்க்கும் விடாதுநண் பாமுனி பெண்கொடிக்கா
விண்ணாடர் கோன்கொண்ட காமத்தி னாலந்த வேள்கணைபாய்
புண்ணா யிரங்களைக் கண்ணா யிரமென்னும் பொன்னுலகே! 46

எழுதியவர் : அருணாசலக் கவிராயர் (21-May-24, 8:57 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 18

மேலே