பிறந்தநாள் பரிசு

எத்தனையோ பிறந்தநாள்கள்
கடந்தாகிவிட்டது.

எத்தனை எத்தனையோ
பரிசுகளும் பெற்றாகிவிட்டது.

ஆனால் இந்த முறை,
மனைவி தந்த பரிசு
மிரளச் செய்தது.

என்னை நான் இன்னும்
புரிந்துகொள்ள,
ஒரு புத்தகத்தை பரிசளித்தாள்.

புத்தகத்தை எழுதியவர்கள்
சுமார் நூற் பேர்.

எழுதியவர்களுள்,
பள்ளித் தோழர்கள்,
கல்லூரி நண்பர்கள்,
அலுவலக அன்பர்கள்,
முகபுத்தக சகாக்கள்,
அக்கம் பக்கத்தினர்,
என் உறவுகள்,
தூரத்து உறவுகள்
இன்னும் சிலரும் அடக்கம்.

செய்திகளை திரட்டியது என்னவள்,
எழுதிப் பதியவைத்தது என் தந்தை.

நேசக் காகிதங்களால்,
பாச மையூற்றி,
பந்தப் பேனாவில் எழுதி,
உறவுச் சங்கிலியால் தைத்து
உருவாக்கி இருந்தனர்
இந்த புத்தகத்தை.

நேசமானவர்களின் பங்களிப்பை
கண்டு நெகிழ்ந்தேன்.

நான் நியாயமானவன்
என்கிறான் ஒரு நண்பன் - அவனுக்கு
தெரியாது நியாயமானவர்களுக்கு
அநியாயக்காறாக்கள் நண்பர்களாய்
இருக்க முடியாதென்று!

மிகப் பொறுமைசாலி
என்கிறாள் ஒரு தோழி - அடித்
தோழியே, தோழமையில் ஆத்திரமாவது,
அவசரமாவது ஏதடி?

அன்பானவனாம்!
உங்களின் துன்பங்களிலும்
அன்பை வாரி இறைத்ததால்
ஆக்ரோஷ அரிதாரம்,
தரிப்பது சாத்தியமா?

சிந்தனைவாதி என்றார்
ஒரு அலுவலக நண்பர்.
அலுவலக நேரங்களிலும்
செவி குடுத்த உங்களின்
உள்ளமே என் சிந்தனையின் ஊற்று.
மறந்துவிடாதீர்!!

பிறர் மனம் நோகும் படி,
வார்த்தைகள் உதிர்க்காதவனாம்.
எனக்கு பிடிக்கவில்லை என்பதைக் கூட,
உங்களுக்கு பிடிக்கும்படி கூறும்படி
பார்த்துக்கொள்வேன்.
அவ்வளவே!

சிரித்த முகமாம்!
நான் பழகும் அனைவருமே,
மனித நேயம் கொண்ட
மனிதர்கலானதால்,
சிரித்தபடி திரிகிறேன் போலும்.

வயதான ,பெரியப்பாவின்,
பல்லாண்டு வாழ்க செய்தி
என்னை ஏதோ செய்தது.

ஒன்று விட்ட அக்காள்,
வேலைக்குச் செல்வது - நான்
கொடுத்த உற்சாகமென்று
அறிந்து கொண்டபின் - சற்று
கரைந்து போனேன்.

ஒன்றாய் வளர்ந்த
ஒன்று விட்ட அண்ணன்கள்
என்னை பற்றி உயர்வாய்
சொன்ன பொது - கொஞ்சம்
சிவந்துபோனேன்.

மைத்துனர்களின்
மயிர்கூச்சரியும் வார்த்தைகளால்,
மயங்கி நின்றேன்.

மச்சினிச்சியின்
உருக்கமான வார்த்தைகளுக்கு
உண்மையாய் இருப்பேன்.

எப்போதும் வாழ்த்துவது போல்
இப்போதும் வாழ்த்தும் - என்
சித்தியின் வாழ்த்துக்களால்
இன்னும் வெகு தூரம் செல்வேன்.

மூன்றாவது மகனென்று சொன்ன
அத்தையின் வார்த்தைகள் - எனக்கு
கூடுதல் பொறுப்புகள் உள்ளதை
புரியவைத்தது.

நான் அவளின் இன்னொரு
தந்தையென்று சொன்ன - என்
இரண்டாவது தங்கையின்
வார்த்தைகளை பார்த்து,
உருகிப் போனேன்.

நானே அவளின் குழந்தைகளின்
வழிகாட்டி என்று சொன்ன - என்
முதல் தங்கையின் நம்பிகையை
நியாயப்படுதுவேன்.

எனக்கு உயிர் கொடுத்த,
அப்பாவின் உயிரோவிய
வார்த்தைகள் - என்னை
புத்தம் புதிதாய் பூக்கச் செய்தது.

நானே அவளின் சந்தோசமென்று,
உரு கொடுத்த அம்மாளின்
சந்தோசத்தை நீட்டிக்கச் செய்வேன்.

அப்பானாலே ஜாலி
தான்னு குதிக்கும் - என்
மகளின் ஜீவ காந்த
சக்தியை பேணிக் காப்பேன்.

இதை அரும்பாடுபட்டு,
சேகரித்த என்
அருமையானவளுக்கு - நான்
இன்னும் அருமையானவனாய்
திகழவேண்டும் என்று புரிகிறது.

வாழ்த்து செய்தியும்,
கருத்துகளும் பகிர்ந்து கொண்ட,
அனைத்து அன்பு நெஞ்சகளுக்கும்
நன்றி.

எழுதியவர் : கணேஷ்குமார் balu (20-Aug-14, 6:01 pm)
Tanglish : piranthanaal parisu
பார்வை : 1631

மேலே