அன்புள்ள நியந்தாவுக்கு1

என்ன என்ன வார்த்தைகளோ....சின்ன விழி பார்வையிலே....
சொல்லி சொல்லி முடித்து விட்டேன்.... சொன்ன கதை புரியவில்லை.....



உன்னைத்தான் கண்டு சிரித்தேன்.. நெஞ்சில் ஏதோ ஏதோ நினைத்தேன்.......பாடல் ஒரு பக்கம் ஓடிக் கொண்டே இருக்க.. 58 முறையாக அந்த கடிதத்தைப் படித்து விட்டேன்....இனி படித்தால் அந்த காகிதம் கிழிந்தே போகும் என்பதால் நானே ஒரு முடிவுக்கு வந்தேன்.... இங்கு முடிவென்பது திரும்பவும் ஆரம்பம் என்று பொருள்.....

யார் அவள்... என்னுடன் கல்லூரியில் படித்தவளா........?

இருக்கலாம் என்றாள்........

பள்ளியில் படித்தவளா?

இருக்கலாம் என்றாள்...

நாடகத்தில் உடன் நடித்தவளா?

இருக்கலாம் என்றாள்...

பசங்க யாரும் விளையாடுகிறார்களா?

இருக்கலாம் என்றாள்.

என்ன இருக்கலாம் இருக்கலாம்... இருக்கலாம்.... உனக்கு ஒரு மண்ணும் தெரியாது...... அவ, இதுல யாரும் இல்ல. அவ வேற... ஒரு பூகொத்து மாதிரி வந்தா....... உச்சி மலைக் காத்து மாதிரி பறந்து போய்ட்டா....!!!!!.....

இப்போது என்னால் கொஞ்சம் மூளையில் அடி பாகத்தில் பதிந்த அவளின் ஒர விழிப் பார்வையை மேல் கொண்டு வந்து யோசிக்க முடிகிறது.....ஆம்.... கூட்டம் நடந்து கொண்டு இருக்கையில் இருக்கையில் அவள் இருந்தும் இல்லாமல் இருந்த அவள் இருத்தல், இருந்தலில் இருந்த என்னில் இடம் மாறி இருந்தததை உணர முடிந்ததை நினைவு படுத்த முடிந்தது....சரி எதற்கு குழப்பம்..... அலைபேசி எண் தான் இருக்கிறதே... பேசி விடலாம் என்று முடிவெடுத்த தருணத்தில், இவள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள்...... பெண்களை சமாளிப்பது பெரும் பாடு.... அப்பப்பா.... ஏனோ என் முகத்தை கண்ணாடியில் பார்க்கத் தோன்றியது.... பார்த்தேன்... நரைத்திருந்த ஒரே ஒரு முடியை மீசையில் இருந்து பிடுங்கினேன்.... இவள் உதடு சுழித்து முகம் திருப்பிக் கொண்டாள்....

உனக்கு ஒண்ணு சொல்லட்டுமா.....?
------------------------------------------------------------------
அவள் கண்கள் எவ்ளோ அழகு தெரியுமா.....ம்ம்.. நெல்லிகனியில் கருவிழி வரைந்து கண் இருக்கும் இடத்தில் பொருத்தி விட்டால் எப்படி இருக்கும்.... அப்படி இருக்கும். அகன்ற நெற்றியில் அளவான பொட்டு.... அதுவும் திருஷ்டி என்று பொருள் படும், அரை வட்ட நிலவின் அழகுக் குறிப்பு......ம்ம்.. அடிக்கடி கூந்தல் கோதும் விரல்களில் நகங்கள் பளிச்சிட்ட நொடிப் பொழுதுகள் இன்னும் பசுமையாகிறது நினைக்க நினைக்க....

அலை பேசி எண்ணை அழுத்தினேன்...... ஓடி வந்து இவள் தடுத்தாள்.. சட்டென கன்னத்தில் மாறி மாறி முத்தம் பதித்தாள்..... மெல்ல சினுங்கினாள்.

"முதல்ல பப்ளிக் பூத்ல இருந்த கூப்ட்டு பாரு. எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கைதான்....."

என்று சொல்லி புலம்பிக் கொண்டே சென்று சுவற்றில் புகைப்படமாக நின்று கொண்டாள்.

எனக்கு ஏனோ புகைப் படத்திற்கு கலர் பென்சிலில் ஆடை வரையத் தோன்றியது.........


கவிஜி

*நியந்தாவை நெருங்கும் நிமிடங்கள்.........

எழுதியவர் : கவிஜி (22-Aug-14, 9:25 pm)
பார்வை : 199

சிறந்த கவிதைகள்

மேலே