என்ன விலை

என் ஐந்து வயதில்
தந்தை இறந்து போக - அதன்
பின் ஒரு நேர வயிற்றைக்
கழுவ என் தாய் கல்லுடைத்தாள்
வீடு வீடாய் சென்று பாத்திரம்
தேய்த்தாள்
அதில் மீதியை கோண்டு
என்னை படிப்பித்தாள்
என் ஏழு வயதில் தாயும்
இறந்து போக - என் ஏழைக்
குடிசையில் அனாதயானேன்
தாயை நினைத்து கண்ணீர்
வடிக்கையில் அன்றொருநாள்
தாய் சொன்னது யாபகம் வந்தது
"பணம் இருந்தால் எல்லாம்
கிடைக்கும் " - அதன் பின்
நான் எப்படியோ படித்தேன்
பணம் சம்பாதித்தேன் , செல்வந்தனானேன்
தாய் சொன்னது போல் எல்லாம்
கிடைத்தது
இருந்தும் பெரும் குறை
பணம் இல்லாத போது இருந்த
தாய் , தந்தை இல்லை
நிம்மதியும் இல்லை
இந்த மூன்றும் என்ன விலை ?
யாராவது கூறுங்களேன்
என்னிடம் பணம் இருக்கிறது

எழுதியவர் : fasrina (23-Aug-14, 11:54 am)
Tanglish : yenna vilai
பார்வை : 75

மேலே