காதலின் ஓசை

ஓசை செய்யாப் பாடல்
கேட்ட துண்டோ? -உன்
உள்மனம் காதலில்
பேச லுண்டோ?

ஓசை செய்யா அழுகை
கேட்ட துண்டோ? - கோபம்
ஒண்டிடக் காதலி
பிரிந்த துண்டோ?

ஓசை செய்யா விம்மல்
கேட்டதுண்டோ? - அவள்
ஒதுங்கியே நடந்திடப்
பார்த்த துண்டோ?

ஓசை செய்யா அருவி
கேட்டதுண்டொ?-நீயும்
ஒதுங்கிட, அவள்கண்
பார்த்ததுண்டோ?
=== ====

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (24-Aug-14, 12:50 pm)
பார்வை : 543

மேலே