கூண்டுக்கு வெளியே கிளி..
நானும் நீயும்
அந்த
பூங்காவிற்கு
போயிருந்த பொழுது,
கூண்டுக்குள் இருந்த
கிளிகளை பார்த்து விட்டு
நீ சொன்னாய்..
"சே..எவ்வளவு அழகா இருக்குல்ல...?"
கூண்டுக்குள் இருந்த
கிளிகளும் உன்னை பார்த்து
அதே வார்த்தைகளைத்தான்
சொல்லியிருக்கும்...