ஓர் எழுத்தாளனின் கதை- இதுவரை- IV- --சந்தோஷ்

இதுவரை.. 04
-----------------------------

(குறிப்பு : இந்த கதையின் சம்பவங்கள் செய்திகள் யாவும் 1999 - 2000 ம் வருடத்தில் நிகழ்வுகளாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.)

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மீண்டும் தனியார் மருத்துவமனையில் தினகரன்.

தினகரனின் தந்தையிடம் காவியா..
“ அங்கிள் தினாவிற்கு இப்படி ஒரு விசித்திர நோய் இருக்குன்னு ஏன் என்கிட்ட மறைச்சீங்க. ? “
“ இல்லம்மா . சொல்லக்கூடாதுன்னு நினைக்கல.. ஆனா உன் தமிழ் பேராசிரியரிடம் சொல்லியிருந்தேனே”
“ இல்ல அங்கிள், அவங்களும் என்கிட்ட சொல்லல.. என் தினாவுக்கு எதுவும் ஆகக்கூடாது அங்கிள். ப்ளீஸ் அவன் எனக்கு வேணும்.. எப்படியாவது அவனை கியூர் பண்ணுங்க. அவன் இல்லாம நா...... .”
தினகரனின் மீதான காதலைஅவனின் தந்தையிடமே தன்னையும் அறியாமல் வெளிப்படுத்தும் காவியாவின் உணர்வை கண்ட தினகரனின் தந்தை...
“ இல்லடா.... அவனுக்கு ஒண்ணும் ஆகாதுடா.. நீ இப்படி அன்பா இருக்கும் போது .......உனக்காக அவன் இருப்பான்... “ என்று சொல்லி மேலும் எதையும் சொல்ல முடியாமல் தன் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் போதே...

“ சார்..! உங்களை டாக்டர் கூப்பிடுகிறார்.. “ நர்ஸ்

“ ம்ம் வரேன்மா... காவியா..! நீ வீட்டுக்கு போ .. உன் வீட்டுல உன்னை தேடுவாங்கல.. டைம் ஆச்சி நீ போம்மா.. ”

“ சரி அங்கிள்..! டாக்டர்கிட்ட பேசிட்டு எனக்கு கூப்பிடுங்க.. “

“ ம்ம்ம் டேக் கேர்ம்மா. “

--------------------

மருத்துவரின் அறை..!

“ என்னாச்சு டாக்டர் .. இப்போ தினாவுக்கு எப்படி இருக்கு ? “ மருத்துவரிடம் வினாவுகிறார் தினகரனின் தந்தை.
“ என்னாச்சு சார்.. நேத்து என்ன நடந்தது “ எதிர்கேள்வி கேட்கிறார் மருத்துவர்.

காவியா தன்னிடம் சொன்ன கல்லூரியில் முத்துமாணிக்கத்தின் வருகை, தினகரன் கவிதை வாசித்த நிகழ்வு , அதில் தினகரனுக்கு ஏற்பட்ட அதீத சந்தோஷ தருணங்கள் , அதுனால் ஏற்பட்ட மயக்கம் என அனைத்தையும் மருத்துவரிடம் சொல்கிறார்.

“ சார் நான் தான் லாஸ்ட் டைம் உங்க சன் ட்ரீட்மெண்ட் எடுத்தப்பவே சொன்னேன்ல.. அவனுக்கு இதுமாதிரி அப்நார்மல் பீல் வராம பார்த்துங்கன்னு வார்னிங் பண்ணினேன்ல. அவன் பிரையன் ஆக்டிவிட்டீஸ் நார்மலா இருக்காது சார். . “

“ எப்படி டாக்டர் ? அவன் எப்போ எப்படி பீல் பண்ணுவான்னு நான் எப்படி வாட்ச் பண்ணிட்டே இருக்க முடியும். 24 மணி நேரமும் அவன்கூடவா இருக்க முடியும். போற இடத்தில ஏதாவது இன்சிடிண்ட் பார்த்தாலும் நமக்கே கோபம் வரும்ல அதுப்போல அவனுக்கும் வரலாம்ல டாக்டர்.. இதுக்கு என்னதான் சொல்யூசன்... “

“ம்ம்ம்ம்ம் சரிதான். அதுக்குதான் அவங்க காலேஜ்லயும் இன்பார்ம் பண்ண சொல்லியிருந்தேன் .. சரி.. இது மெடிக்கலா கியூர் பண்றது சிரமம்.. ஆனா அவனே சைக்காலாஜிக்ல்லா பிராக்கீடீஸ் பண்ணினா , எந்த சூழ்நிலையும் பேலன்ஸ் பண்ண தெரிகிற ஸ்டேஜ்க்கு வர பழகணும். அதுக்கு அவனோட கிளோஸ் ப்ரெண்ட்ஸ் மாதிரி யாராவது ஹெல்ப்பும் வேணும். சில மாத்திரைகள் கொடுத்திருக்கேன். ஸ்கேன் ரிப்போர்ட் பார்த்து பார்த்து பிரோயோஜனம் இல்ல... நான் சொல்ற இந்த ரிஸ்க் எடுங்க “

என்று சொன்ன மருத்துவர் தினகரனின் தந்தைக்கு சில ஆலோசனைகள் சொல்கிறார்.

பின்பு அதில் சிலவற்றை காவியாவிடமும் சொல்கிறார்..

காவியாவின் செல்போனில் தினகரனின் தந்தை...

“ அங்கிள்.. தினா எப்படி இருக்கான்..? ”

“ யெஸ்மா இப்போ ப்ர்பெக்டிலி ஆல்ரைட்.. சரிம்மா நான் சொல்வதை கேட்டுக்கோ .. ? “

“ ஒகே அங்கிள்... “

சில அறிவுரைகள் ஆலோசனைகள் காவியாவிடம் சொல்கிறார், அதை கேட்ட காவியா..

“ அங்கிள் ..எப்படி அங்கிள்....? என்னால முடியாது அங்கிள்.. கவிதை எழுதும் அவனையே கவிதையை வெறுக்க வைக்க சொல்றீங்க.. அவன்கிட்ட நான் சொல்ல முடியாது அங்கிள்.. அவன்கிட்ட பிடிச்ச விஷயமே இந்த கவிதைதான்,.. பட் அங்கிள் நான் வேற மாதிரி அவன் கிட்ட பேசுறேன். “

“எப்படிம்மா ? “

“ அவனை இன்னும் அதிகமா கவிதை எழுத வைப்பேன்.... முடியும் என்ற வார்தையின் அகராதி நான். அங்கிள்..! நான் பார்த்துக்கிறேன். இனி தினாவிற்கு நான் தான் எல்லாமே.. ப்ளீஸ் அங்கிள் யூ டோன்ட் வொரி ”

ஏதோ தீர்க்கமான முடிவு எடுத்த காவியா.. என்ன செய்து தினகரனை நோயை தீர்க்கப்போகிறாள். ?அதிகமான சிந்தனைகள் தினகரனின் உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர் சொல்லியும் , காவியா அவனை சிந்திக்க வைக்க கூடிய சூழ்நிலை ஏற்படுத்தி எப்படி தினகரனின் உயிரை காப்பாற்றுவாள்?


2 நாட்களுக்கு பிறகு....!

கல்லூரியில் தினகரனுடன் வகுப்பறையில் காவியா...!

” உனக்கு என்ன ப்ராப்ளம் இருக்குன்னு உனக்கு தெரியுமா ? “

”இல்ல காவியா .. அப்பா எதோ மயக்கம் வருதுன்னும்.. பி பீ ப்ராப்ளமுன்னு சொன்னார் .. வேற எதாவது இருக்கா என்ன ? “

“ ம்ம்ம் ஆமா.. ! சினிமாவுல வர்ற மாதிரி உனக்கு ப்ளெட் கேன்சர்...! லொக்குன்னு லொக்குன்னு இருமிட்டே இருப்ப.. ” மைக் ” மோகன் மாதிரி ஸ்டேஜ்ல கவிதை வாசிக்கும் போது வாய்ல இரத்தம் வருகிற நோய் இருக்கும் ” நக்கலாக பேசினாள் காவியா..


“ ஹே அடி வாங்குவடி..... என்னை பார்த்தா நக்கலா இருக்கா.. ? “

“ ஆமா... பின்ன என்ன.. ? ஆஸ்பிட்டல ரெண்டு நாள் படுத்தா உனக்கு ஏதாவது பெரிய ப்ராப்ளமாவா இருக்கும். நீ ஒரு நோஞ்சான் பயடா.. மனசுல தையரியமே இல்ல உனக்கு.. அதான் இப்படி மயங்கி மயங்கி விழுற.... நீ எப்போ விழுவேன்னு தெரிய மாட்டிங்குதுடா.. அடுத்து எப்போ டா மயக்கம் போடுவா.. காலேஜ் ல ஒரு ஆம்புலன்ஸ் பெர்மனெண்டா நிக்க சொல்லவா ? “ அளவுக்கு அதிகமாகவே தினகரனை நையாண்டி பண்ணினாள் காவியா.. காரணமாகத்தான். ஆனால் காரணம் புரியாமல், காரணமற்ற கோபத்தை காவியா மீது காட்ட

“ காவியா.. திஸ் இஸ் டூ மச்... எனக்கா தைரியம் இல்ல... என்ன செய்யணும் இப்போ சொல்லு, ? இந்த தேர்ட் ப்ளோர் ல இருந்து குதிச்சு காட்டவா.. ? “

இந்த கோபத்தை எதிர்பார்த்த காவியா... ”,,, ம்ம் அப்பா சாமி நீ குதிச்சு காலை உடைச்சு நொண்டியா உன்னை பார்க்க முடியாதுடா...”

” சரி இதுல ஒரு தீம் கொடுத்து இருக்கேன். இதற்கு ஒரு கவிதை எழுது.. ரொம்ப காரமா இருக்கணும். வெடி வெடிக்கணும்.. எவனும் இனி இப்படி கவிதை எழுதக்கூடாது... இந்தா இந்த பேப்பர் பாரு... “

வாங்கி பார்த்த தினகரன் அதிர்ந்துதான் போனான்...

”எப்படி இது.. என்னால எழுத முடியுமா... ?”

”முடியும் நினைச்சா எழுது.. இல்ல நீ ஒரு கோழைன்னு ஒத்துக்கோ... எப்படி சார் வசதி ?“

“ இல்ல இதுக்கு நிறைய திங்க் பண்ணனுமே... “

“ அதான் சேலேன்ஜ் .. எழுதுடா என் செல்ல கவிஞனே.... நான் காத்திருக்கிறேன் .. உன் முடிவுக்காக “

”என்னது முடிவுக்காகவா ? “

” சாரி சாரி உன் கவிதைக்காக .. “

------------------------------------------------------------------------

காவியா கொடுத்த பேப்பரை உற்று பார்த்துக்கொண்டே இருந்த தினகரனின் தோளில் கைப்போட்டு “ என்ன சார் ? ரொம்ப சிம்பிள் தீம் .. இதுக்கு போய் இவ்வளவு அலட்டிக்கிறீங்க” காவியா தினகரனை கவிதை எழுத தூண்டுகிறாள். இப்படி பேசினால் அவனுள் ஒரு ஆக்ரோஷம் வரும் என்று ஒரளவுக்கு முன்பே கணித்து வைத்திருந்தாள்.

காவியா கொடுத்த கவிதை கருவினை மீண்டும் நிதானமாக படிக்கிறான் தினகரன்...!

அந்த கரு....!

---மீனவர் ஒருவன் கடலில் மீன் பிடிக்கும் போது இலங்கை கடற்படையினரால் சுட்டு கொல்லப்படுகிறான். இதுனால் ஆவேசமடைந்த அவன் காதலி இந்திய பிரதமரை நேரில் சந்தித்து அரசாங்கத்தை சபித்து தனி தமிழ்நாடு கேட்கிறாள். கவிதையில் தமிழ்நாடு என்று தனிநாடு கேட்பதற்கான வலுவான கோரிக்கைகள் இருக்க வேண்டும். இந்தியாவிலிருந்து தமிழ்நாடு பிரித்தால் தான் தனி ஈழம் சாத்தியமாகும் என்று கூடுதல் செய்தி கவிதையில் அழுத்தமா இருக்கணும். சிலப்பதிகார கண்ணகியின் அதே கோபம் இந்த கவிதையில் இருக்க வேண்டும் . இந்த கவிதை படித்து ஒருவருக்காவது தனி தமிழ்நாடு வேண்டும் என்ற உணர்வு பொங்க வேண்டும்----

” காவியா..! இதுல எதுவுமே எனக்கு தோண மாட்டிங்குது... தனி தமிழ்நாடு எப்படி சாத்தியம்? அண்ட் தனிநாடு எனக்கு உடன்படாத விஷயம்..? இஷ்டமில்லாத விஷயத்தில எப்படி கவிதை எழுத முடியும் . அதுவும் ஆக்ரோஷமா? என்னால முடியாது....! வேற தீம் கொடு..”

“டேய் டேய் நீ தமிழனா டா...? நம்ம மீனவர்கள் கடல்ல மீன் புடிக்கும் போது எவ்வளவு கஷ்டப்படுறாங்க? உனக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா.. ? இதுவரைக்கும் இந்தியா இந்தியான்னு சொல்லி நம்மள நாமே ஏமாத்திகிட்டோம்.அது புரியலயா ? லங்காவில் நம் ஆளுங்க எவ்வளவு கஷ்டப்படுறாங்க...டிவில பார்த்தீல..? நம்ம தலைவர் பிரபாகரன் அவங்களுக்காக எவ்வளவு பாடுப்படுறார்...? உப்பு போட்டு திங்கிறவனா இருந்தா நல்லா யோசித்து எழுது.. இல்லையா.... இப்போவே இந்த செகண்ட்டே நம்ம ப்ரெண்ட்ஷிப் கட்...! “

“ ஹே காவி..! என்ன நீ .. இதுக்கு இப்படி டென்ஷன் ஆகுற...? நான் தமிழன் தான்.. ஆனா... தமிழன் உணர்ச்சியை இப்படி வெறும் கவிதையில காட்டிட்டு வெளியில வேஷம் போடுவது எனக்கு பிடிக்கல...! உணர்ச்சி கொடுக்கிற கவிதை எழுதலாம்.. அதுக்கா இப்படி ஒரு வேடிக்கையா சேலேண்ஜ் பண்ற கவிதைக்கு ஏன் தமிழ் உணர்வை இழுக்குற,... ? இது எனக்கு புடிக்கல காவி... இந்த உணர்வு பூர்வமான கவிதைகள் எல்லாம் தானா வரணும். இப்படி வலுக்கட்டாயமா எழுத கூடாது.. இதுதான் என் பாலிசி...! சாரி டீ.. இதுல திங்க் பண்ணி எழுத வேண்டியது இருக்கு,, இந்தியா குடிமகனா... என்னால அதன் இறையாண்மை பாதிக்கிற விஷயத்த எழுத கஷ்டமா இருக்கு...? ”

தினகரன் இப்படி சொன்னதும் அடுத்து என்ன செய்வது என்று காவியா திணறித்தான் போனாள்.. மனதுக்குள் “ இவனை உசுப்பி விட்டா நல்ல கவிதையும் கிடைக்கும், மாணவர்களின் உணர்ச்சியும் கவர்மெண்ட்க்கு காட்ட உதவும்ன்னுதானே நினைச்சேன்.. இதுனால இவன் பிரையன் எவ்வளவு ஸ்ட்ராங்ன்னு பார்த்துக்கலாம்.. இவன் என்னடா இப்படி பேசுறான்...”

” தினா... உனக்கு எல்லாம் சொல்லி புரிய வைக்க முடியாது . என்னோடு லைப்பரிக்கு வா...”

காவியாவுடன் நூலகத்திற்கு சென்றான். அங்கு தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை ராணுவத்தினர் துன்புறுத்தும் செய்தி. இந்திய அரசு மெத்தன நடவடிக்கை, கச்சத்தீவு பற்றிய செய்திகள், தமிழக அரசியல்வாதிகளின் போலி கண்ணீர். ஈழத்தில் நடக்கும் போர், விடுதலைப்புலிகளின் போராட்டம் என பல தகவல்களை உள்ளடக்கிய பத்திரிக்கை செய்திகளை தினகரனுக்கு எடுத்துக்காட்டினாள். மேலும் தமிழர்களின் வரலாறு, குமரிக்கண்டம் பற்றிய செய்திகள். என பல்வேறு வரலாற்று புத்தகங்களையும் தினகரனை படிக்க வைத்தாள்.

தினகரனின் மூளை.. இப்போது அதிக ஆக்ரோஷ தகவல்கள் உள்வாங்கி கொண்டது. உணர்ச்சி பிழம்பாய் அந்த தகவல்கள் எழுத்துகளாக உருமாற்ற போகும் சிந்தனைகள் அவன் மூளையில் பலத்த ரசாயன மாற்றத்தை உண்டு பண்ணும். இயல்பாக இருக்கும் மனித மூளை சிந்திக்கும் போது அதிக இரத்தத்தை வேதியியல் பரிமாற்றத்தில் உபயோகித்துக்கொள்ளும் எனும் போது. இயல்பான நிலையிலிருந்து சற்று பலமிழந்த மூளை உடைய தினகரனுக்கு இரத்த அழுத்தம் காரணமாக இதயத்தின் துடிப்பு அதிகமாகி உடலை ஓரிரு நிமிடம் செயலிழக்க வைக்க நேரிடலாம்.


”தினா...! உன்கிட்ட காரணமில்லாம இப்படி ஒரு கவிதை கேட்கல..! அடுத்த வாரம் நம்ம எல்லாரும் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு கோரிக்கை வைத்து மத்திய அரசுக்கு எதிரா தமிழ்நாடு புல்லா ஸ்டிரைக் பண்ணப்போறோம். அப்போ இந்த கவிதையை நான் வாசிக்க போறேன். சரியா..? ஸ்டூண்ட்ஸ் என்ன பெரிசா சொல்லிட போறாங்கன்னு நக்கல் பண்றவங்க மூஞ்சில கரியை பூசணும்... தினா .. ப்ளீஸ்.. “

“ சரி காவி...! ம்ம் எனக்கு தெரியாம என்னமோ ப்ளான் பண்ணி இருக்கன்னு நல்லவே தெரியுது. ஏன் நான் தான் இத எழுதணும்ன்னு நினைக்கிற,., என்னை விட நல்லா எழுதுற சீனியர்ஸ் இருக்கிறாங்களே, அவங்ககிட்ட கொடுத்தா இந்த தீம்ல பட்டை கிளப்பிவிடுவாங்களே? “

“டேய்.... மடையா.. நீ என் பிரெண்டு டா உன் மேல கான்ஃபிடண்ட் இருக்கு... உன்னால வீரமா எழுத முடியுமுன்னு எனக்கு தெரியும். இங்கு பாரு தினா... இந்த கவிதை ரொம்ப முக்கியம். உயிரை கொடுத்து எழுதுடா.. ப்ளீஸ்.. உயிரே போனாலும் எழுதி கொடுத்திட்டுதான் போகணும்....”

“என்ன காவியா.. ஒரு மாதிரியாவே பேசுற..? உயிர் போனாலும் பரவாயில்லைன்னு.... என்னாச்சு உனக்கு ,ஏன் இவ்வளவு எமோஷனல் ஆகுற...? அதிகமா எமோஷனல் ஆனா உன் ஹெல்த்க்கு ப்ராப்ளம்...”

“ ஓ நீ எனக்கு சொல்றீயா....? நீ தாண்டா மயங்கி மயங்கி விழ்ந்துட்டே இருப்ப., நாங்க எல்லாம் மெண்டலி ஹெல்த்..அண்ட் ஸ்டிராங்கானவங்க சார்.. பார்த்து நீ இந்த கவிதை எழுதறேன்னு செத்து கித்து போயிடாதே... ஹா.ஹா..ஹா.ஹா.ஹா.. “ காவியா வேண்டுமென்றே இப்படி தினகரனுக்கு எதிர்மறையான முறையில் தெம்பு ஊட்டுகிறாள்

“ என்னடி இது வில்லி சிரிப்பு...? காவியா மேடம்.. நானும் ஸ்டிராங் தான்.. பட் நீ மனசுல என்னமோ எண்ணம் வச்சிட்டு பேசுற... காவியா.. ம்ம்ம் இரு இரு உன்னை வச்சிக்கிறேன்...! “

“ஹே ச்சீ என்னடா வச்சிக்கிறேன் கட்டிக்கிறேன்ன்னு அசிங்கமா... “

“லூசு...காவியா..கொழுப்புடி உனக்கு... ஹா...ஹா.ஹா.ஹா. “ தினகரன் பலமாக சிரித்தான்....

----

“ காவி...! நீ சொன்ன கவிதை எப்போ எழுதி தரணும் “ தினகரன்.

“ இப்போ. இப்போவே...” காவியா தினகரனை அவசரப்படுத்துகிறாள்.

“ ஹே என்னடி நீ...! அவ்வளவு பெரிய விஷயத்தை இப்போவே எழுதி தர சொல்ற? . அடுத்த வாரம் தானே போராட்டம்.. இரண்டு நாள் டைம் கொடு..” காவியாவிடம் கெஞ்சுகிறான் தினகரன்.

“ நோ வே. நீ இப்போ எழுதினா தான் என்ன என்ன மாற்றம் பண்ணலாம்ன்னு யோசிக்க டைம் இருக்கும்.. சீ டா.. இது கவர்மெண்ட் எதிர்க்கிற போராட்டம். சோ....கவிதை செம ஹீட்டா ஹிட்டா ஆகணும். இப்போவே எழுதினாதான் அடுத்த வாரம் பைனல் ஆகும் “ காவியா வேண்டுமென்றே அவசரப்படுத்துகிறாள்.

காரணம், தினகரனின் மூளைக்கு ஓர் அழுத்தம் கொடுத்து, அதனால் அவன் என்ன சிரமப்படுகிறான், அதை எப்படி சமாளிக்க வைக்கலாம் என்று முன்கூட்டியே மனநல மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு, திட்டம் போட்டு வைத்திருக்கிறாள். ஆனால் தினகரனால் அதிக அழுத்தமான சூழ்நிலையில், அதிக வற்புறுத்தி சிந்தித்தால், அவனின் அதீத உணர்ச்சியால் மூளை தண்டுவடம் பாதிக்கும். அது அவனின் உயிரையே எடுக்கும்.

காவியா கிட்டதட்ட உயிரை பணய வைக்கும் முயற்சியாக இருந்தாலும் முடிவு நல்லவிதமாக அமையும் என்று அதிகப்படியான, அதீத அதிகப்படியான தன்னம்பிக்கையில் இருந்தாள்.

“ தினா... ம்ம்ம் பர்ஸ்ட் லைன் எழுது... “ இயல்பாக இல்லாமல் ஒரு வித மிரட்டல் தொனியில் தினகரனுக்கு கட்டளையிடுகிறாள்.

“ இரு....இரு காவி...” யோசிக்கிறான்.

”கவிதையின் தலைப்பு என்ன ? ” காவியா

“எழுதிட்டு அப்புறம் யோசிக்கலாம் காவி..சரியா ? “

“ இல்ல தலைப்பு போட்டு அப்புறம் கவிதை எழுது “

“ என்ன...........டீ ரொம்ப மிரட்டுற..சரிதான் போடின்னு போயிடுவேன்.. ஓவரா.............. “ தினகரனுக்கு திக்க ஆரம்பிக்கிறது. உணர்ச்சி வசப்பட ஆரம்பிக்கிறான். காவியா ஏன் இப்படி நடந்துகொள்கிறாள் என்று புரியாமல் தன் பக்குவநிலைக்கு அப்பாற்பட்டு கோவமடைவதால் , அவனின் மூளையில் ரசாயன மாற்றம் ஆரம்பிக்க, சிந்திக்கும் திறன் இழக்கிறது. கோவத்தில் அவன் முகம் சிவப்பதை கண்ட காவியா


“ஹே தினா... சாரிடா செல்லக்குட்டி..! ஏன் இப்போ டென்ஷன் ஆகுற? “ என்று கேட்டுக்கொண்டே தன் இரண்டு கைகளால் தினாவின் கன்னத்தில் கைவைத்து குழந்தையை கொஞ்சுவது போல கொஞ்ச...

காதலி கைப்பட்டா
எரிமலைக்கூட
பனிமலையாகுமே....!

தினகரன் அதற்கு விதிவிலக்கா என்ன ?

“லூசு.. ஏன் இப்படி பிகேவ் பண்ணுற காவி.. மிரட்டுற , இப்போ கொஞ்சுற.. சம்திங் ராங் வித் யூ டா “ தினகரன்.

காவியா மனதிற்குள்.. “எனக்கா... பாவி ... உன் எமோஷனல் ப்ராப்ளம் கியூர் ஆக நான் என்ன ரிஸ்க் எடுக்குறேன்.. நீ என்னையே பைத்தியமா பாக்குற,,, “ என்று மனதிற்குள் நினைத்துவிட்டு... ”சரிடா....! எழுது....”


“ ம்ம் நான் கவிதை எழுதிட்டு தான் தலைப்பு போடுவேன்.”

“ சரி எழுதி தொலை..”

கவிதையின் முதல் வரி... சற்று ஆக்ரோஷம் குறைவாக எழுதி காவியாவிடம் கேட்கிறான்..

“ முதல்ல ஒரு பேரா எழுது.. அப்புறம் பாப்போம் “ காவியா அறிவுறுத்த

எழுதுகிறான்.... எழுதிவிட்டான், எழுதியதை எடுத்து காட்டினான். காவியா அதை படித்து காட்ட வேண்டும் என்றாள்.

படித்த தினகரனை பார்த்து.. “ தினா... காரம் கம்மியா இருக்கு.. இன்னும் கொஞ்சம் தூக்கலா.... தைரியமா எழுதுடா “

“எப்படி காவி என்னதான் இருந்தாலும் நம்ம பிரைம் மினிஸ்டர் ..அவரை தப்பா சொல்லக்கூடாது காவி “

“இல்ல எழுது... கடைசி நேரத்துல பாக்கலாம் “ காவியா எப்படியாவது மறுமுறை தினகரனை சிந்திக்க தூண்டுகிறாள்.

சிந்திக்க ஆரம்பித்தான். உடனே எழுதினான். எழுதும்போதே அவனின் முகத்தில் ஒரு திருப்தி அலை ஓடியது. இதை கண்ட காவியா ஒரு யுக்தி கையாண்டாள்.

“தினா...! பர்ஸ்ட் பேரா அப்புறம் எழுதிக்கலாம்... மெயின் பாயிண்ட் மீனவர் பிரச்சினை பத்தி எழுதிட்டு அப்புறம் பர்ஸ்ட் எழுது....”

“ ஸ்டூபீட்... கவிதை எப்படி எழுதனும்ன்னு எனக்கு தெரியும். முதல் வரி ஆரம்பிச்சா கோர்வையா நூல் பிடிச்சு கடைசில முடிப்பேன்.. நீ மூடு...! “ மூடு என்று இழிவாக பேசிய தினகரன் அதை தவறு என்று புரியாமல் பேசிவிட்டான் என்று தெரிந்தாலும் அதையே ஒரு பெரிய பிரச்சினை பண்ண ஆரம்பித்தாள் காவியா.

“ ஹே மைண்ட் யுவர் வோர்ட்ஸ் தினா. என்னடா லிமிட் கிராஸ் பண்றா... நான் ஒரு பொண்ணு என்னை பார்த்து இப்படி அசிங்கமா பேசுற... ராஸ்கல்..! “

“ லூசு வாட் ஹேப்பன்.. நான் என்ன சொன்னேன்னு இவ்வளவு கோவப்படுற...? “

“ நீ என்ன சொன்னன்னு திரும்ப யோசிச்சு பாரு...தினா “என்று பொய்யாக கண்ணீர் வடித்தாள்.

இதை கண்ட தினகரன் “ காவி.. ப்ளீஸ் அழாதே டீ...! நான் எழுதவா இல்ல உன்கிட்ட இப்படி ஆர்கியூ பண்ணவா.. ஏன் இப்படி என்னை டார்ச்சர் பண்ற... ? இப்போ என்ன .. சாரி சாரி சாரி போதுமா.. வெயிட். நீ சொன்ன பாயிண்ட் எழுதி காட்டுறேன். நான் யாரன்னு இப்போ இப்போ இ இ இ இப்போ ............... “ திக்கும் ஓசை நீளுகிறது. அது அவனின் தாழ்வுமனப்பான்மையால் அல்ல.. அதீத உணர்ச்சி மயம். ஆர்வம் மேலோங்கும் போது திக்க வாய் வருகிறது.

“ தினா... ! ஒகே ஒகே... திக்கி பேசினா ஸ்டாப் பண்ணிட்டு பேசு.. ஓகே ரிலாக்ஸ்.. ஓகே நான் தப்பா நினைக்கல...! நீ எழுது.. “


“இல்ல.. நீ சொன்ன பாயிண்ட் எழுதிட்டு அப்புறம் உன்கிட்ட பேசுறேன்..” பிடிவாதம் பண்ண ஆரம்பித்து எழுத ஆரம்பித்தான். இதை எதிர்பார்த்த காவியா அவனின் சிந்தனையில் வரும் ஆக்ரோஷ வரிகளை வாசிக்க ஆவலுடன் காத்திருக்க..


தினா மடமடவென் எதையோ எழுதுகிறான். எழுதும்போது அவனின் முகம் பல பாவனைகளை காட்டுகிறது . என்ன எழுதுகிறான் என்பதை அவன் முகத்தை பார்த்து அறிந்து கொள்ள முடியும். விகாரமாக முகத்தை வைத்து.. கண் இமைக்காமல், எழுதுகோலை தாளில் இருந்து எடுக்காமல் எழுதுகிறான்.

தீடிரென.. சிந்தனையில் ஏதோ சில வார்த்தைகள் சிக்காமல் போக, தன் எழுதுகோலை எடுத்து தன் வலது நெற்றியில் தன்னையும் அறியாமல் குத்திக்கொள்ள... அந்த எழுதுகோல் வலது கண்ணுக்கு மேல் பலமாக தாக்குகிறது.
இரத்தம் பீறிட்டு சீறி ஆக்ரோஷமாக வெளியேறினாலும்
தினகரன் அதை பொருட்படுத்தாமல் எழுத ஆரம்பிக்க...
எழுதும் தாளில் சிவப்பு மையாக அவன் ரத்தம் படிவதை , கவனக்குறைவாக இருந்த காவியா எதேச்சையாக பார்த்து விட, பார்த்து துடித்து விட.. அலறுகிறாள்...!

“ டேய் தினா.....! பிளட் வருதுடா... பிளட் பிளட் டா தினா.....................! “ என்று அலறி கூப்பாடு போட்டு அவனை உலுக்குகிறாள்.

நிமிர்ந்த பார்த்த தினா....” காவி டிஸ்டர்ப் பண்ணாதே......... டிஸ்டர்ப் பண்ணாதே... பண்ணாதே .. பண்ணாதே...! “

காவியாவின் அலறல் ஒலியை விட அவனின் அதட்டல் ஒலி அதிர வைத்தது.

”ஐய்யோ.. டேய் தினா ஏண்டா இப்படி பிகேவ் பண்ணுற....? பிளட் வருதுடா... ரைட் ஐ மேல பிளட் வருதுடா...!
தினா நீ ஒன்னும் எழுத வேண்டாம். எனக்கு பயமா இருக்கு “ பயத்தால் கெஞ்ச ஆரம்பித்தாள்.

என்ன ஆயிற்று தினகரனுக்கு....? காவியாவிற்கு சற்று நேரத்திற்கு பிறகு புரிந்தது.


தினகரன் கவிதை எழுதுவானா என்பதல்ல இப்போது கேள்வி.. தினகரன் ஏன் இப்படி ஆனான்.. இது அவனை என்ன செய்யும்....?


(தொடரும்)


-இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (8-Sep-14, 3:40 am)
பார்வை : 295

மேலே