ஓர் எழுத்தாளனின் கதை- இதுவரை - VI - --சந்தோஷ்

இதுவரை.. 06
-----------------------------

முன்குறிப்பு : இந்த படைப்பு 1998-2000 ம் வருடத்தில் நடந்தவையாக சித்திரிக்கப்பட்ட கதை .
---------------------------------------------------------------------------
காலை மணி 9

”கோயம்புத்தூர் சந்திப்பு உங்களை வரவேற்கிறது” என்று வளைந்த நிற்கும் பலகையுடன் காட்சியளிக்கும் கோவை ரயில் நிலையம் முன்பு மாணவ அமைப்பை சேர்ந்தவர்களும் கோவை மாவட்டத்திலுள்ள் ஓவ்வொரு கல்லூரியில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் அணி அணியாக வந்துகொண்டிருந்தனர்.

தினகரனின் வீட்டில் காவியா..!

“ ஹாய் தினா.! ரெடியாகிட்டீயா..? நேத்து நைட் ஃபுல்லா நீ எழுதின கவிதையை வாசிச்சு நல்ல மனப்பாடம் பண்ணிட்டேன்.
“என்ன கவிதை அது “ என்று கவிதை வாங்கி படித்து பார்த்த தினகரனின் தந்தை மிகவும் ஆத்திரப்பட்டார்..” தினா நீ எழுதியது சரியல்ல. இத உன் தமிழ் ஆசிரியர் பார்த்தாங்களா ? “

“ இல்லப்பா ஏன்... இதுல என்ன தப்பு இருக்கு...”

“ டேய்... இதுவரை உன்னை திட்டியது இல்ல.. ஏதோ ஆவேசத்தில எழுதலாம். அதுக்காக இப்படியா? இரு உன் தமிழ் பேராசிரியர்கிட்ட பேசி மாத்தி தரேன். 10 நிமிஷம் இரண்டு பேரும் நில்லுங்க..”
..........
“ டேய் தினா... பேராசிரியர் சொன்ன திருத்தம் இது.. இந்த மாதிரி எழுது... “
ஆனாலும் காவியா மிக பிடிவாதமாக கவிதையை திருத்த ஒத்துக்கொள்ளவே இல்லை. ”இனிமேல் மாத்த முடியாது அங்கிள். இது எங்க உணர்ச்சி . சாரி. ஏய் தினா. வாடா லேட் ஆச்சு”

இருவரும் தினகரன் தந்தையின் பேச்சை மீறி சென்றனர் சட்டத்தின் கோர முகத்தை அறியாமல்.
--------------------------------------------------------------
தினகரன் - காவியா போராட்டம் நடக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.
அங்கே சில அளவிலே காவல் துறையினரும், இரண்டு மூன்று பத்திரிக்கை நிருபர்கள் மற்றும் புகைப்படக்காரர்கள் மட்டுமே இருந்தனர். அவர்களுக்கு இது வெறும் கண் துடைப்பு மாணவர் போராட்டம் தான். கடமைக்கு பணியாற்றவே வந்திருந்தனர்.

ஆனால் போராட்டம் நடக்கும் இடத்திற்கு 500 க்கும் அதிகமான மாணவர்கள் குவிந்தனர். கோஷமிடும் போராட்டம் என்று அனுமதி வாங்கப்பட்டு அது உண்ணாவிரத போராட்டமாக கடைசி நேரத்தில் மாற்றப்பட்டது. காரணம் அன்று காலை வந்த பத்திரிக்கை செய்தி

**** தமிழக மீன்வர்கள் 20 பேர் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டார்கள், 34 மீனவர்கள் சுட்டுகொல்லப்பட்டனர் என்று அஞ்சப்படுகிறது.சென்னை, நாகை, தூத்துக்குடி கடலோர மாவட்டங்களில் பதற்றம். மத்திய அரசு மீண்டும் அலட்சியப்போக்கு, மீனவர்களின் குடும்பத்தினர் கதறல்****

------------என்ற இந்த செய்தி தமிழக முழுவதும் மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது. ஆகவே போராட்டம் உண்ணாவிரத போராட்டமாக மாறியது.
--------------------------------------------
காலை மணி 10:

போராட்டம் ஆரம்பமானது.

பல கல்லூரியின் மாணவர்கள் ஆவேசமாக பேசினர். ஆனால் அதில் வெறும் மீனவர்களின் மீதான அனுதாபம் மற்றும் மத்திய அரசை கெஞ்சி கேட்கும் பேச்சாக இருந்தன.

---போராட்டம் - உண்ணாவிரதமாக மாறியதால் காவல்துறையினர் மாணவ அமைப்பினரிடம் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தனர். வாக்குவாதம் முற்றியது. மாணவர்களின் பலத்த எதிர்ப்பையும் , ஆக்ரோஷத்தில் அவர்கள் உண்ணாவிரத்தை விட்டுகொடுக்க மாட்டார்கள் என்று தெரிந்துக்கொண்ட உயர் காவல் துறை அதிகாரி.... மாலை 4 மணிக்குள் போராட்டம் கைவிட வேண்டும். அனுமதியில்லாமல் உண்ணாவிரதம் இருப்பதும் , பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பதும் சட்டப்படி குற்ற செயல் என்று எச்சரித்து விட்டு மாலை வரை மாணவர்களுக்கு வாய்ப்பளித்தார் ----

நண்பகல் மணி 12 :

மாணவ அமைப்பின் தலைவர் பேசினான். இவனின் பேச்சில் மீனவர்கள் படும் இன்னல்கள், அவர்கள் கடலில் இலங்கை கடற்படையினரால் எப்படி தாக்கப்ப்டிகிறார்கள் , மத்திய அரசின் கவனக்குறைவு என்று ஆவேசமாக பேசி கூடியிருக்கும் 500 க்கு மேற்ப்பட்ட மாணவர்களின் மனதில் ஆவேசத்தை கொண்டு வந்தான்.

அதிகளவில் மாணவர்கள் கூடி உண்ணாவிரதம் நடத்துவது , அதில் மாணவர்களின் உணர்வை அறிந்து பத்திரிக்கை செய்தியாளர்கள் அதிகளவில் கூடினர், தனியார் தொலைக்காட்சிகள் ஒன்றும் நிகழ்வை பதிவு செய்தன. புகைப்பட வெளிச்சங்கள் அதிகம் கண் சிமிட்டின.


மதியம் மணி 2 :30

தினகரன் பேச அழைக்கப்பட்டான். “ நண்பர்களே ...! இன்று நம் மனதில் இருக்கும் இந்த ஆவேச உணர்வை அப்படியே கொஞ்சம் திசை மாற்றுங்கள். நமக்கான தீர்வு, நம் தமிழ் மீன்வனுக்கான தீர்வு, நம் தமிழர்களுக்கான தீர்வு கிடைக்கு வேண்டுமென்றால் நாம் தீர்க்கமான ஒரு முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு வந்துவிட்டோம் என்றே எனக்கு தோன்றுகிறது. ஒரு முடிவை நோக்கி நான் எழுதிய எழுத்துகளை என் தோழி காவியா இப்போது உங்களுக்கு வாசித்து காட்டுவாள் “ மிகவும் நிதானமாக அழகாக பேசி முடித்தான் தினகரன்.

ஒரு கல்லூரி பெண் ஒலி வாங்கியின் முன்பு பேசபோகிறாள் அதுவும் மிக ஆக்ரோஷமான கவிதை எனும் போது அனைவரின் மத்தியில் ஆர்வம் மேலோங்கியது, அதற்கு முன்பு தினகரன் கவிதைக்கு கொடுத்த அறிமுகம் , பத்திரிக்கை செய்தியாளர்களின் காதுகளை உன்னிப்பாக கவனிக்க வைத்தன. . மாணவர்கள் மிகுந்த உணர்ச்சி வயப்பட்ட நிலையில் காவியாவின் கவிதை வாசிப்பை கேட்க தயாராகினர்.

எப்போதும் சாதாரணமாக கவிதையை மனதிற்குள் படிப்பதை விட அதை அழுத்தம் திருத்தமாக கவிதையின் உணர்ச்சியோடு கூடிய குரல் பாவனையில் படிக்கும்போது ,அந்த கவிதையின் ஆற்றல், உணர்ச்சி, நயம் ஆகியவற்றால் கவிதை எழுச்சி பெற்று கேட்பவரின் மனதை அதிகம் உணர்ச்சி வசப்பட வைக்கும். அது எதிர்மறை பாதிப்போ , நேர்மறை பாதிப்போ தரலாம் . அது குறிப்பிட்ட கவிதையின் கருத்தை பொறுத்து இருக்கும்.

காவியா எழுந்தாள்.
சிலப்பதிகார காவியத்தில் பாண்டிய மன்னனிடம் நீதி கேட்ட கண்ணகியின் அதே ஆக்ரோஷத்தை காவியா வெளிக்காட்ட ஆரம்பித்தாள்.
***************************************
வணக்கம்..! தமிழன் தமிழச்சிகளே..!



பிரதம மந்திரியே ! இந்திய அரசே..!
வெற்று கோரிக்கையிடும் ஆர்ப்பாட்டம் அல்ல
இது கொந்தளிக்கும் தமிழர்களின் போராட்டம்..!
புது விடுதலையை அறிவிக்கும் மாணவக்கூட்டம்.. !
-------------------------------
பிரதம மந்திரியே !, பிரதம மந்திரியே !!
மந்திரித்து விட்ட மக்கு மந்திரியே !
எங்கள் மீனவ நண்பனின் கதியை பார் !
உங்கள் ஆணவ ஆட்சியின் சதியை பார்.!

கடல் அன்னையை நம்பி செல்கிறான்
இலங்கை வலையில் சிக்கி திணறுகிறான்
இந்தியதுரோக உலையில் வெந்துமடிகிறான்.

”இவன் மரணம் .. காரணம் ..உந்தன் துரோகம்”
அந்தாதி செய்யுளாய் அன்றாட செய்தியாகிறது.
உன்னோடு மல்லுக்கட்டி அனுப்பும் கோரிக்கை
மடல்களும் உன் முகத்தில் காறிஉமிழ்கிறது.

செங்கோட்டையில் மங்களமாய்
பறக்கிறது பாரதகொடி ..!
தென்கோடியில் மங்கையிடம்
பறிக்கப்படுகிறது தாலிகொடி.!

இமயத்தில் குண்டுவெடித்தால்
உனக்கு ஆக்ரோஷம்
குமரியில் மீனவன்
செத்தால் சந்தோஷமோ?

பாரதியும் கட்டப்பொம்மனும்
இன்று இருந்திருந்தால்
உன்னையும் உன்
துரோகத்தையும் பொசுக்கியிருப்பர்.
இங்கே பார்..! எரிமலையினை
கக்கும் மாணவர்களை பார்.!
இந்தியாவிலிருந்து தமிழகத்தை
மீட்கும் படையை பார்..!
------------------------------------
தமிழனை இந்தியனாய் நீ பார்க்கவில்லை
தமிழனின் உணர்வை நீ மதிக்கவில்லை
தமிழ் மீனவனின் நலனை நீ காப்பதில்லை
தமிழகக்கட்சிகள் துப்பிய ஆதரவில் பதவி
நாற்காலியை மட்டும் நக்கிக்கொள்வாயோ?

ஏய் இந்திய நாட்டு
துரோக பிரதமரே...!
இந்தியா, இந்தியன் என
நாங்கள் மார்தட்ட
நீங்கள்
எங்கள் தலையில்
மண்ணை கொட்ட
தன்மானம் இழந்து
அவமானப்பட்டது போதும்.

இந்தியாவின் இறையாண்மையை
பேணியது போதும்
எல்லை மீறிய பொறுமையால்
பொருமியது போதும்.

உன் இறையாண்மை
மலட்டு ஆண்மையென்றே
மாவீரர்கள் நாங்கள்
ஏளனமாய் கவனமாய்
புரிந்துக்கொண்டோம்

வந்தே மாதரம் ..!
வந்தே மாதரம்..! என்று
முழங்கிவிட்டு தழிழுணர்வை
முழுங்கியது போதும்..!
உயிர் கொடுத்து பாடிய
தேசிய கீதம் – எங்கள்
தமிழர்களின் உயிரை
எடுத்தது போதும்..!
எங்களின் தேசப்பக்தி
முகத்தில் கொடூர
துரோக அமிலத்தை நீ
துப்பியதும் போதும்!

பட்டொளி பறக்கும்
மூவர்ணக்கொடியில்
நாற்றமெடுக்கிறது
தமிழனின் பிணவாடை..!
செத்தொழிந்து போகட்டும்
எங்களின் இந்திய
தேசப்பற்று..!
வெகுண்டு எழுதிடுவோம்
தமிழனின் தன்மானத்தை
உயிர்க்கொடுத்து...!


இந்திய தேசமே..!
நீ எங்கள் தாயா ?
இனியும் நாங்கள்
இந்தியர்களா....?
இனியும் எங்கள்தேசம்
இந்தியாவா ?
துளியும் பற்றுஅற்று
வெறுத்துவிட்டோம்

இது இளித்துக்கொண்டிருக்கும்
அரசியல் பேச்சல்ல
இடி சத்தத்தில் வெடிக்கும்
மாணவனின் வீரமுழக்கம்.

இந்திய தேசத்தின் தெற்கில்
விடுதலை கூப்பாடு ..!
அணுகுண்டாய் வெடித்து
பிறக்கும்பார் தனி நாடு ..!
------------------------------------
வேண்டும் வேண்டும்
தமிழ்நாடு, தனிநாடு!
வெட்டியெடுப்போம்!
வெட்டியெடுப்போம் !
துரோகிதேசம் இந்தியாவிலிருந்து
தமிழகத்தை வெட்டியெடுப்போம்!
மீட்டெடுப்போம் மீட்டெடுப்போம்
கச்சத்தீவை மீட்டெடுப்போம்.
ஒன்றுப்படுவோம் !!
ஒன்றுப்படுவோம் ..!!
தமிழர்களே ! ஒன்றுப்பட்டு
குமரிக்கண்டத்தை தோண்டி எடுப்போம்..!

.................

மாணவ நண்பர்களே........!
எம் தமிழ் தேசத்து வீரர்களே..!


அங்கே ஈழத்தில்
உறுமிக்கொண்டிக்கிறான்.
ஓரு தன்மான தமிழனாம்
நம் தேசத்தலைவன் பிரபாகரன்.
அவனின் மூத்திரத்தை
கொஞ்சம் குடித்தாவது
தன்மான ஆத்திரத்தை
வெகுமானமாய் ஏற்று
மாண்டுப்போன தமிழுணர்ச்சியை
மீண்டும் பெற்றிடுவோம்...!

................................................................
தமிழக இளைஞர்களே..!


தனிநாடாய் தன்மானம் காப்போம் !
தனி ஈழமாய் இலங்கையை மீட்டெடுப்போம்.!
கரிகாலனின் தலைமையை ஏற்போம்..!
விடுதலை புலிகளாய் புறப்படுவோம் ..!

வாரீர் ..! வாரீர்..! வாரீர்..!
இளம் புலிகளே வாரீர் ..!
அணி திரண்டு வாரீர்..!
நம் படைக்கண்டு
மிரண்டு கொண்டு
ஓடட்டும் எதிரிகள்.
பயமின்றி பயணிக்கட்டும்
மீனவ படகுகள்.

தமிழ்த்தாயே ..!
புது புரட்சி ஒன்று ஆரம்பிக்கிறோம்
புது தேசம் என்று ஆளப்போகிறோம்
விடுதலை கோஷம் ஏந்திய
மாணவ படை நாங்கள்
எரிமலையின் சீற்றத்துடன்
புலி கொடி ஏந்தி நிற்கிறோம்..!

தமிழ்தாயே..! வரம் கொடு ! வீரம் கொடு..!

வெற்றிவேல்...! வீரவேல்....!

*****************************************************


கவிதை கேட்ட மாணவர்கள் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டனர். செய்தியாளர்கள் வாயடைத்து ஆச்சரிய கண்களை விரித்தினர். தொலைக்காட்சி கேமரா நிகழ்வுகளை உள்வாங்கிக்கொண்டது. அந்த இடமெங்கும் ஆக்ரோஷம் , கொந்தளிப்பு சூழ்நிலை.

காவியா ஆவேசத்துடன் படித்துகொண்டிருந்த போதே..
போராட்டம் திசை மாறுகிறது என்று உணர்ந்த உயர் காவல் துறை அதிகாரியிடமிருந்து சில ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. மகளிர் காவல் படை வரவழைக்கட்டனர். போராட்டத்தை கலைக்கும் புகை கக்கும் வண்டி ஆயுத்தமான நிலையில் நிற்க வைக்கப்பட்டன.
தினகரனின் எழுதுகோல் கேள்விக்குறியோடு அவனின் சட்டைப்பையில்...!

காவியா பேசிய பிறகு தினகரன் மீண்டும் ஓலிவாங்கி முன்பு நின்று அந்த கவிதைக்கான தெளிவுரையாக நீண்ட விளக்கமாக பேசுகிறான். அதில் பிரதமரையும், மத்திய அரசின் துரோகத்தையும் பற்றி கவிதையில் சொல்ல முடியாத காரச்சாரமான விஷயங்களை ஆவேசமாக எடுத்துரைத்து கொண்டிருக்க,
காவல் துறையினர்க்கு ஓர் அவசர உத்தரவு வருகிறது. ””போராட்டத்தை உடனே தடை செய்யுங்கள்! , மேலிடத்தின் கட்டளை ! ””

மாணவ அமைப்பின் தலைவரை காவல் துறை உயர் அதிகாரி அழைத்து “ போராட்டம் அப்படீன்னு பர்மிஷன் வாங்கிட்டு இப்போ என்ன நடக்குது. என்ன பண்ணிட்டு இருக்கீங்க.? உடனே எல்லாத்தையும் ஸ்டாப் பண்ணிடுங்க. தேவையில்லாத இஸ்யூஸ் பேசுவது சரியல்ல. ஸ்டூண்ட்ஸ்னால வார்ன் பண்றேன். “

“ சாரி சார்.. இது எங்க உணர்ச்சி, அதுவும் அந்த பொண்ணு இப்படி கவிதை படிப்பான்னு நான் கூட எதிர்பார்க்கல. ஆனா சொன்னதில்லயும் தப்பா தெரியல. நீங்க அந்த பொண்ணுகிட்டயும். கவித எழுதிய அந்த தினகரன்கிட்டயும் பேசிக்கோங்க. 4 மணி வரைக்கும் பர்மிஷன் கொடுத்து இருக்கீங்க இப்போ 3 மணி தான் ஆகுது. “ போராட்டத்திலிருந்த மாணவ அமைப்பு தலைவன்.

பின்பு தினகரன் - காவியா இருவரையும் போலீசார் விசாரித்தனர். தினகரனிடம் ஒரு அதிகாரி..
”தம்பி.. நீ எழுதினதும் அந்த பொண்ணு பேசியதும் சரியல்ல, வன்முறை தூண்டக்கூடிய பேச்சு, ரூல்ஸ்படி தேசிய பாதுகாப்பு சட்டத்தில் உன்னை உள்ள தள்ள முடியும். “

குறுக்கிட்ட காவியா “ எதுசார் தப்பு..? எங்க உணர்வை பேசுறோம்..? எங்க இனம் பற்றி நாங்க ஹைலைட் பண்ணி பேசுவது தப்பா? “
“ லுக் .. நீ பேசினது தப்பா..? சரியா? ஆர்கியூமெண்ட் பண்ண நான் வரல. நீ பேசியதில இந்திய இறையாண்மை எதிர்ப்பு, தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரிச்சு பேசியது என எல்லாமே கவர்மெண்ட்க்கு எதிரா இருக்கு, சோ நீ பேசினதை தொடர்ந்து மத்தவங்களும் இதே கருத்தை பேசினா கொந்தளிப்பு ஆகும். இப்போவே பாரு எப்படி ரியாக்‌ஷன் இருக்குன்னு..”
“ சார்... எதுவாக இருந்தாலும் அது தப்பா தெரியல... இந்த கூட்டத்தில உங்களுக்கு சரியான காரணம் சொல்ல முடியாது. முடிஞ்சா கேஸ் போட்டுக்கங்க “ இளம் இரத்தத்தின் வேகத்தில் சட்டத்தின் மறுமுகத்தை அறியாமல் தினகரன் ஆக்ரோஷப்பட, அதனை பார்த்த மற்ற மாணவர்களும் அதே வேகத்தில் கொந்தளிக்க அங்கு சூழ்நிலை மாற்றத்தில் அனல் ஏறியது.

கூச்சல், குழப்பம் என்று அமளியான அந்த நேரத்தில் , சில குறும்புக்கார மாணவர்கள் கல்லை எடுத்து காவல் துறை வாகனம் மீது வீச, இதை பயன்படுத்திக்கொண்ட சமூக விஷமிகள் தங்கள் வேலையை காட்ட ஆரம்பிக்க, இதை கண்ட காவல் துறையினர் ஆத்திரப்பட....
அங்கே போர்கள காட்சிகள் அரங்கேறின.

மாணவர்களை அடித்து விரட்ட உத்தரவுகள் வந்தன. போலீஸ் லத்திகள் தனது முரட்டு குணத்தை காட்ட ஆரம்பித்தன, பல மாணவர்களின் தொடை, முதுகுகள் பலத்த அடியில் பழுத்துப்போக ஆரம்பித்தன. பல மாணவர்கள் போலீஸ் அடியில் இருந்து தப்பிக்க மிரண்டு ஓடி ஒளிந்துக்கொண்டனர்.

ஆனாலும் சில தமிழ் இன மான உணர்வுமிக்க மாணவர்கள் உண்ணாவிரதம் இருக்கும் இடத்தை விட்டு பாதியில் வெளியேற மாட்டோம் என்று சாலைமறியிலில் ஈடுப்பட்டனர். அதில் காவியா- தினகரனும் இருந்தனர்.

இதுனால் கொதிப்படைந்த போலீசார் “ ஒழங்கா இந்த இடத்தை விட்டு போகலைன்னா நடப்பது விபரீதமா இருக்கும் “ என்று எச்சரிக்க..

“ சார் முடியாது..! போராட்டம் நடத்த வந்தோம். அரசாங்கத்திற்கு கண்டனம் தெரிவச்சோம்.அவ்வளவுதான் அதுக்கு ஏன் இப்படி எங்களை மாடு அடிக்கிற மாதிரி அடிக்கிறீங்க. இதுக்கு கலெக்டர் வந்து மன்னிப்பு கேட்க வரை போகமாட்டோம் “ தினகரன் மிக உறுதியாக போலீசாருக்கு பதிலளித்தான்.

புகை கக்கும் வாகனத்திலிருந்து புகை வெளியேற்றி கூட்டத்தை கலைக்க வேண்டும் என்று மேலதிகாரியின் உத்தரவு வந்தது. இருந்தாலும் மாணவர் நலன் கருதி போராட்ட களத்தில் இருக்கும் இன்ஸ்பெக்டர்... “ தம்பி லாஸ்ட் வார்னிங் , கலைஞ்சு போங்க...இல்ல ஸ்மோக் ட்ரீட்மெண்ட் பண்ண வேண்டியதா இருக்கும்.” எச்சரித்து சில நிமிடம் அவகாசம் தருகிறார்.

கோபம்,ஆத்திரம், ஆவேசம்,கொந்தளிப்பு என அனல் தெறிக்கும் உணர்ச்சிகளில் நிலை தடுமாறிய தினகரன், காவியாவை தன் கைகளால் இறுகப்பிடித்து கொண்டான். இந்த களேபரத்தில் அவளுக்கு எதுவும் அடிப்பட்டுவிடக்கூடாது என்ற கவனம் அவன் கண்ணில் தெரிந்தது. செய்தறியாமல் காவியாவும் அதீத பயத்தில் நெஞ்சம் படப்படக்க தினகரனுக்கு ஏதும் ஆகிவிடக்கூடாது என்று அக்கறைப்பட்டாள்.

தினகரனின் சக மாணவன் ஒருவன்.. “ டேய் தினா.. நீ எழுதிய கவிதைனாலதான் இவ்வளவு பிரச்சினை, வந்தோமா, ஏதோ கண்டனம் தெரிவிச்சோமான்னு போகாம .. ஏண்டா இப்படி பண்ணின... உன் கவிதைக்கு விளம்பரம் தேட தமிழ் உணர்ச்சி தான் கிடைச்சுதா? “ என்று தினகரனை பொறிந்து தள்ளினான்.

இதை கேட்ட காவியா “ அடத்தூ உனக்கு இவ்வளவுதானா புத்தி.. ரொம்ப சீப்பா பிகேவ் பண்றா. ஒரு நல்ல எழுத்தாளன் எழுதுகோல் கையில எடுத்துட்டா , அது புரட்சியை உண்டாக்கவே இருக்கும் , விளம்பரம் தேடனும்ன்னா எங்களுக்கு வேற வழி இருக்கு. இப்படி கலவரம் நடக்கும்ன்னு நாங்க ஆசைப்பட்டா எழுதினோம். உன்னை மாதிரி துரோக தமிழர்கள் இருப்பதுனால தான் அவனவன் அடிக்கிறான். பிரச்சினைன்னு வந்துட்டா விட்டுட்டு ஓடப்பாக்கிறீங்க, அப்புறம் நிலைமை சரி ஆச்சுன்னா தமிழன், தமிழ் அப்படி இப்படின்னு சொல்லி பெரிய மயிர் மாதிரி வாய் கிழிய பேசுவீங்க.... அடச்சீ போ நாயே.. யாரை பார்த்து விளம்பரத்திற்கு எழுதினேன்னு சொல்ற “ என்று காவியா ஆவேசத்தின் உச்சத்தில் கத்திக்கொண்டிருப்பதை பார்த்த ஒரு காவல் துறை அதிகாரி..

” ஏம்மா... உன்னாலதானே இப்படி ஆச்சு. ஒழங்கா இருக்கமாட்டீங்களா ? ”

“ சார்.. ஒழங்கா கவர்மெண்ட் இருந்திருந்தா நாங்களும் ஒழங்கா இருந்திருப்போம்.. கவர்மெண்ட் சம்பளம் வாங்கிட்டு சும்மா இப்படி கத்திட்டு இருக்காமா எங்க உணர்ச்சிக்கு கொஞ்சம் ரெஸ்பான்ஸ் கொடுங்க சார். நாங்க என்ன கொலை செய்யவா சொல்றோம் , மீனவர்களை கொலை செஞ்சவங்களை கண்டிக்க கேட்கிறோம். உங்கள மாதிரி லஞ்சம் வாங்கிட்டு 2 அடிக்கு தொப்பை வளர்த்திட்டு இந்த நாட்டை கொள்ளையடிக்கிற பொறுக்கிங்க நாங்க இல்ல “ என கிண்டலாக காவியா பதில் சொல்ல , அந்த அதிகாரி அதை மரியாதை குறைவாக எடுத்துக்கொண்டார். ஆத்திரத்தில் காவியாவை ஓங்கி கன்னத்தில் அடித்தேவிட்டார்.. இதைக்கண்ட ஆவேசத்தின் உச்சத்திற்கு சென்ற தினகரன், அந்த காவல் அதிகாரியின் சட்டையை பிடித்து முகத்தில் எச்சிலை துப்பி…
” பதில் சொல்ல தெரியாம, ஒரு பொண்ணுகிட்ட உன் பலத்தை காட்டுறீயே... நீ எல்லாம் ஒரு போலீஸ் அடச்சீ பொறுக்கி நாய்களே, லஞ்ச எலும்புத்துண்டுல உடம்பு வளர்த்துட்டு எங்கிட்ட வீரத்தை காட்டுறீங்க.. வெட்கமா இல்ல.. ......................................” தினகரன் அதீத கோபத்தில் என்ன என்னவோ பேச, போலீசாரின் கொடூர கண்கள் தினகரன் - காவியாவை குறிப்பார்த்து குறித்து வைத்துவிட்டன.

போலீஸ் அதிகாரி காவியாவை அடித்ததால் வெகுண்ட மற்ற மாணவர்களும் அந்த அதிகாரியை தாக்க, அது போலீஸ் -மாணவர்கள் மோதலாக உருவெடுக்க காரணமாக அமைந்துவிட்டது.

” ராஸ்கல் போலீஸ்காரன் மேலயே கையை வைக்கிறீங்களா? “ போலீசார் தங்களின் ஒட்டு மொத்த துறையே அவமானப்படுவதை எப்போதும் விரும்பமாட்டார்கள். அதுவும் தினகரன் போன்ற மிக சாதாரண குடிமகனிடம்..!

ஐந்து ஆறு போலீசார்களின் முரட்டு தடித்த லத்திகள் தினகரனை மட்டும் குறிப்பார்த்து தாக்க முற்பட்டன. இல்லை இல்லை கொலை செய்ய முற்பட்டன.

முதல் அடி தினகரனின் மீது விழந்தபோதே “ காவி.. தள்ளிப்போ.. நான் சமாளிச்சுக்கிறேன் “ என்று சொல்லியவாறே காவியாவை வேகமாக , படு வேகமாக தள்ளிவிட்டான்.

இன்ஸ்பெக்டர் மேலயே கை வைப்பீயா?

என்ன கவிதை எழுதி பேசினா நீ பெரிய புடுங்கின்னு நினைப்பா?

டெடரரிஸ்ட் கிரிமினல் கேஸ்ல உள்ள போட்டு தொலைச்சிடுவோம்

பி எம் யை தாக்கி பேசுற தையரித்துல எங்க மேல எச்சில் துப்புவீயா ?

என்று பலப்பல போலீஸ் வீரவசனங்கள் போலீசரால் பேசப்படுகிறது. அடிகள் பலமாக விழுகிறது. அடிவிழுந்தாலும் வலியெடுத்து வாய்விட்டு கத்தவில்லை நெஞ்சழுத்தகார தினகரன். கிட்டதட்ட மயக்கநிலைக்கு சென்ற தினகரனை விடாமல் போலீசாரின் லத்தி மேலும் மேலும் தாக்கியது . இதை பார்த்த காவியா கொஞ்சம் கூட பொறுக்கமுடியாமல்,

” நீங்கல்லாம் போலீசா ரவுடிகளா . ஒரு அப்பாவியை இப்படி ரவுண்டு கட்டி அடிக்கிறீங்க .. பொட்டபசங்களா? ” என்று ஆவேசத்துடனும் பயத்துடனும் கத்திக்கொண்டு தினகரனை காப்பாற்ற அவனருகே செல்ல, ஒரு போலீசின் லத்தி பலத்த விசையுடன் தினகரனின் கால் முட்டியை தாக்க வந்தது அதை தடுக்க காவியா தினகரனின் மீது விழ, அந்த நொடி , அந்த அடி அவளின் தலையை பலமாக தாக்கியது. அவளின் பின் தலை தேங்காய் ஓடு கீறல் விழுந்ததை போல உடைந்து இரத்தம் பீறிட்டு வெளியேறி , அடிப்பட்டு மயக்கமாக இருந்த தினகரனின் முகத்தில் பட்டு முத்தமிட்டது.

ஒரு பெண் ஆண் காவலர்களால் பலமாக தாக்கப்பட்டாள் அது பெண்களை வதைப்பது உள்ளீட்ட பல சட்ட சிக்கல்களை உருவாக்கும் என்பதால் போலீசார் தாக்குதலை நிறுத்தி , மற்ற மாணவர்களை கூடாமல் கலைத்தனர்.

நடுரோட்டில்... சுற்றிலும் காக்கி சட்டைகள்.. நடுவே சிவப்பு வெள்ளத்தில் காவியா மற்றும் தினகரன்.

சற்று நேரத்திற்கு முன் வீரமாக எழுச்சியாக பேசிய இருவரும், அடிப்பட்ட நாய்களாக.. மனிதமுள்ள மனிதர்களின் வேடிக்கை பார்வையில் காட்சி பிம்பமாக..., டி.வி நாடகங்கங்களை பார்த்தே சமுதாய அக்கறையில் உச் கொட்டும் வீரமங்கைகள் விளம்பர இடைவேளையில் வீட்டிலிருந்து எட்டிப்பார்த்து “ பாவம் மனசாட்சி இல்லாம அடிக்கிறானுங்க “ என்று தங்கள் மனசாட்சி சாம்பிளாக காட்டி செல்கிறார்கள்.

“ஓ பாசிட்டிவ்” ரத்தமும் “ஓ நெகிட்டிவ்” ரத்தமும் சாலையில் உறவாடி காதல் கொண்ட நேரத்தில்,
மாவட்ட ஆட்சியர் அங்கு விரைந்து வந்து பார்வையிடுகிறார். மாவட்ட ஆட்சியர் ஒரு பெண். பெயர் கிறிஸ்டி சபாஸ்டின் .
காவல் துறை கண்காணிப்பாளரை நோக்கி “ நீங்க இப்படி நாய்களை அடிக்கிற மாதிரி அடிச்க ஆர்டர் கொடுத்து இருக்கீங்களே..? ஸ்டூண்ட்ஸ்ட்ன்னு கொஞ்சம் கூட யோசிக்க மாட்டீங்களா.. அதுவும் அந்த பொண்ணையும் அடிச்சு இருக்கீங்க,, ரெண்டு பேரையும் மட்டும் ஏய்ம் பண்ணி தாக்குதல் நடத்தின மாதிரி தெரியுது. இத நான் சும்மா விடமாட்டேன். “ என்று பலமாக எச்சரித்து இருவரையும் மருத்துவமனையில் உடனடியாக சேர்த்து சிகிச்சை அளிக்க ஆணை பிறப்பிக்க..
சட்டத்தின் மனசாட்சிப்படி தினகரன் - காவியா இருவரையும் தூக்கி செல்ல வந்தது அவரச ஊர்தி.

அதுவே அமரர் ஊர்தியாக இருவருக்கும் ?????????

------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஒரு சில எழுத்தாளர்கள் விளம்பரத்தனமான புகழுக்கு தன்னை பச்சோந்தி பரம்பரையாக உருமாற்றி எழுதுகோலில் அவ்வப்போது மையின் தன்மையை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். சிலரில் சில எழுத்தாளர்கள் மட்டும் தங்களை எதற்கும் வளைத்தும் , மற்றவர்களின் முன்பு நெளிந்தும் கொள்ளாமல் தன்னையும் தன் எழுதுகோலையும் நிலை நிறுத்திக்கொண்டு தன் சிந்தனையும் பெருமைப்படுத்த உயிரை துச்சமாக எண்ணி உடலிருந்து உயிரை எச்சமாக துப்பியும் விடுவார்கள். அப்படிப்பட்ட எழுத்தாளர்கள் யார் என்ற கேள்விக்கு தான்.. விடை தெரியாமல்....................... விடை தேடி பயணிக்கிறது இந்த தொடர்கதை.



(தொ .... ட.... ரு ... ம் )


-இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (9-Sep-14, 3:47 am)
பார்வை : 1428

மேலே