கருத்திலே படைத்த கவி-11-09-14
211329-பழனிகுமார்.அவர்களின் கவிதைக் கருத்தின் மறு உருவம் இது.
இலக்கறியாத பயணம்-இது
இடறிவிழாத பயணம்.
கடந்ததை மறந்த பயணம்-இனிக்
காண்பன நலமாம் பயணம்!
கெடுதல்கள் நினையாப் பயணம்-பலர்
கிளையாய் உடன்வரு பயணம்!
பழுதுகள் இல்லாய் பயணம்-அதில்
பரவசம் கிடைக்கும் பயணம்!
முழுதும் அறவழிப் பயணம்-ஆயுள்
முழுதும் இனிக்கும் பயணம்!
பண்படப் பண்பட நடந்து-நான்
பயணிக் கும்,என் பயணம்!
புண்பட நடக்காப் பயணம் -நான்
பொழுதும் ரசிக்கும் பயணம்.
படிதொறும் அறிந்த பயணம்-நான்
பட்டுத் தெளிந்த பயணம்!
முடிவினை நினைக்காப் பயணம்-புது
விடிவே தினம்,என் பயணம்.
முழுதாய் இருக்கும் பயணம்-நீயும்
முயல்வாய்! தோற்கும் மரணம்!
=====