அதுதானடி நம் காதல்

மாலை பொழுதினில்
மணிக்குயில் இசைக்கையில்....
என் மஞ்சள் நிலா உன்னோடு
பேசிக்கொண்டு நடக்கிறேன்...
அந்த யாருமற்ற சாலையில்...
விரல் பிடித்து நடக்கலாமா..
என்று நம் இருமனமும்
ஏங்கி துடித்தாலும் கூட...
ஏனோ விலகியே நடக்கிறோம்.....
ஏதேதோ பேச நினைத்தாலும் கூட
அந்த நேரத்தில் மட்டும் ஏனோ
இருவரிடமும் மௌனமே நிலவுகிறது....
பிரியும் இடம் நெருங்க நெருங்க
இதயம் இதமாய் பதறுகிறது.....
பதறிய இதயம் மெல்ல மெல்ல
இயல்பு நிலைக்கு திரும்புவதற்குள்.....
பாலாய் போன காலம் வேகமாய் நகர....
சுகமாக தொடர்ந்த பயணம்
சோகத்தோடு முடிகிறது.....
விழிகள் மட்டுமே மொழிகள் பேச.....
விருப்ப மின்றி பிரிகிறோம்....
நாளைக்கும் கிடைக்க வேண்டும்.....
இந்த இனிய தருணங்கள் என்று
இஷ்ட தெய்வத்திடம் வேண்டி விட்டு ....!!!!!!!!

எழுதியவர் : நெல்லை எம். செல்வ கணேஷ் (11-Sep-14, 4:34 pm)
சேர்த்தது : எம். செல்வ கணேஷ்
பார்வை : 86

மேலே