எங்கள் துயர் துடைக்க வருமையா 0030

ஆதியும் அந்தமும் இல்லா
அரும்பெரும் ஜோதியானவனே
அடியார்களுட்கு அருள் சொரியும்
திருவருளே!
கொக்கட்டிச் சோலையிலே
தான்தோன்றீஸ்வரராய்
தன்னாட்சி புரிகின்ற சுயம்பு லிங்கமே!
சித்திரை தேரினிலே
சிரித்தபடி நீ வலம்வரவே
சிலிர்க்கும் மேனியெல்லாம்
முந்தியோடு முதல் செல்வன்
பின்னால்
முடிசூடி நீ அழகாய்
வலம் வருவாய்
மணல் வீதியிலே
மக்களோடு சேர்ந்து
தேரிழுப்பாய்
தான்தோன் றீஸ்வரராய்
என் துயர் வருவினும்
உன் பாதம் நாம் பணிவோம்
எங்கள் துயர் துடைக்க
நீ ஓடி வரவில்லையே
என் பாவம் செய்தோம்
ஏன் இன் தாமதமோ பரம்பொருளே !
இன்னிசைக்கும் இழுப்பமரக்காற்றில்
இழைப்பாறி சென்றோம்
இன்று வரை
நம்புகின்றோம்
நீ வந்து வினையறுப்பா யென்று
கல் நந்தி
புல்லுண்ட புகழ் தனை
சேர்த்தாய்
வரலாற்று நாயகராய்
வந்தமர்தாய்
பால் குட மேந்தி
பக்தர் வேண்டிநின்று
களமாடிய வரமேதும்
கிடைக்கலையே ஈஸ்வரனே!
தடம் புரளாது தேரோடி
வருவாயே!
தளராத தாகமதை
தீர்த்திட வாருமையா
மண்முனை தேன் கடலில்
தீர்த்தமாடுவாய்
அங்கே அழுகோசை
கேட்கலையா? எந்தன் தேவனே!
உன் நாமம் சொல்லியே அழுதார்கள்
அந் நேரம் நீ வரவில்லையே!
எந்நாளும் உனை மறவாது
துதிக்கின்ற அடியாரை
காப்பாற்ற நீ வரவில்லையே
சந்ததி வாழ்வுக்காய்
சந்நிதியில்நீ அமர்ந்தாய்
உன் காலடியில் பக்தரெல்லாம்
நிந்தனையை அபிஷேகம் செய்கின்றார்கள்
சாவுதனை தந்தவனை
காவு கொள்ள வாருமையா......!