நித்தமும் உன்னோடு நான் பேச நிமிடங்கள் நொடிகலாகிடுகின்றது 0032

என் காதோரம் வந்தவள் நீ தானே
கனவிலும் கவிதையாய் நீ தானே
என் வாழ்வில் வருவது நீயில்லையா?...

என் அணுக்கள் எரிந்து உருகின்றது
நீ பேசாமலிருப்பதால்
நினைவுகள் நிஜமாகுமென நம்பினேன்
அந்த நினைவுகள் அணு அணுவாய் கொள்வதை
நீ அறிவாயா?...

நித்தமும் உன்னோடு
நான் பேச நிமிடங்கள் நொடிகலாகிடுமே
நினைவுகள் எங்கோ தாவிப் போகிறது
தென்றலாய் தேடிப் போகாத உன்னிடம்
நினைவுகளால் நிஜங்களை புரட்டிப்பார்க்கிறது
எத்தனை தடவை புரட்டிப்பார்த்தாலும்
அழிக்க முடியாத நினைவுகளை தந்து விட்டு போனாய்...

கற்பனை செய்து மை பதித்த கவிதை
கண்ணீர் பட்டு கலைந்து போன எழுத்துக்கள் போல
இதயமும் இலட்சனை காண முடியாமல்
நீ என்னோடு பேசாமல் இருப்பதால்....

தூக்கத்தின் குழந்தையின் சிரிப்பின் போது
தாயின் மகிழ்வைக் காட்டும் அழகு போல்
என் இதயம்
நீ என்னோடு பேசுவாய் என்று
இன்று வரை உன் தெருக்களில் வலம் வந்தபடி இருக்கின்றது ....

எழுதியவர் : அ கமல்தாஸ் (15-Sep-14, 7:55 pm)
பார்வை : 132

மேலே