அன்பு மகள்

நீ பிறந்தவுடன்
உன்னை கையில்
ஏந்தியவன் நான் !

உன் பாதம் மார்பில்
உதைக்க உண்டான வலி
உதட்டில் சிரிப்பை தந்தது !

உன்னை முத்தமிடும் பொழுதெல்லாம் வந்த
உன் அழுகையை உணர்ந்தேன்
என் மீசை குத்தியதால் !

நீ கைதட்டி துள்ளி குதித்திட
கை கட்டி வேடிக்கை பார்த்து
ரசித்தவன் நான் !

தாமரை இதழ் பிரித்து
முத்துகள் பளிச்சிட
உன் சிரிப்பை கண்டேன் !

துள்ளி குதித்து
மான் என ஓடிடும்
கால்களை கண்டேன் !

நீ கொஞ்சி விளையாடிடவும்
அடித்து விளையாடிடவும்
நீ விரும்பும் பொம்மையாக நான் !

நீ தடுக்கி விழுந்ததால்
உன்னை தடுக்கி விட்டதாக
பழி சுமந்தது கல் !

நீ
படித்து வாங்கிய பட்டதால்
பட்டமாய் வானில் பறந்தவன் !

நீ பிறந்த நாள் முதல்
உன்னை பிரிந்ததில்லை
உன் திருமணம் வரை !

இன்று !
உன் மகனும்
என் மார்பில் உதைக்க
சந்தோஷத்தில் உறைகிறது என் இதயம் !!!

எழுதியவர் : கார்த்திகேயன் (15-Sep-14, 10:31 pm)
Tanglish : anbu magal
பார்வை : 181

மேலே