அன்பு

நன்மை தீமை
எதுவாயினும்
முன் ஓடி வரும்
உறவிடம் இருப்பது
அன்பு...!!!!

துன்பம் வரும்
வேளை தோள்
கொடுக்கும்
நண்பனிடம்
இருப்பது
அன்பு...!!!

பசி என்று வந்து
கை ஏந்தும்
உயிருக்கு
புசிக்கக்
கொடுக்கும் மனம்
உள்ளவர்களிடம்
இருப்பது அன்பு...!!!

நாழும் பொழுதும்
உழைத்து ஓடாய்
தேயும்
உழைப்பாளிக்கு
ஊதியம் நிறைவாகக்
கொடுக்கும்
முதலாளியிடம்
இருப்பது அன்பு...!!!

ஒதுங்கி தயங்கி
இருக்கும் பிள்ளையை
சேர்த்தெடுத்து
விளையாடும்
பிள்ளையிடம்
இருப்பது அன்பு..!!!

வறுமையில்
வாடும் மனிதனுக்கு
வாரி வழங்கும்
பணம் படைத்தவிடம்
இருப்பது அன்பு...!!!

தினமும் அடி உதை
வாங்கியும் தன்
கணவன் வரவை
எதிர் பார்க்கும்
மனைவியிடம்
இருப்பது அன்பு...!!!

உதவாக் கரைப்
பிள்ளை என்று
தெரிந்தும் வளர்த்து
வரும் பெற்றோரிடம்
இருப்பது அன்பு....!!!!

தூக்கி வீசிய
காகிதமாய்
கருணை இல்லம்
கொண்டு போய்
விட்ட பிள்ளை
தன் தாயை நினைத்து
ஏங்க வைப்பது இந்த
அன்புதான்...!!!

இந்த அன்பு
உயிர்களின்
அஸ்திவாரம்
அன்பு இல்லா
நெஞ்சம் இல்லை
வஞ்சம் கொண்ட
எதிரியிடமும்
நிச்சையம்
இருக்கும் அன்பு..!!

அன்பை அன்பால்
அழைத்துப் பார்
அகிலமும்
அடங்கிவிடும்
உன் முன்பால்..!!!

எழுதியவர் : கவிக்குயில் இ.சாந்தகலா (24-Sep-14, 1:51 pm)
Tanglish : anbu
பார்வை : 337

மேலே