வகுப்பறைத் தூக்கம்...!!
ஆறடிக் கட்டிலிருந்தும் அரை நொடித் தூக்கமில்லை
ஆழ்ந்த தூக்கம் தேடி வகுப்பறை நாற்காலி அடைந்தேன்..!!
பஞ்சமில்லாத் தாலாட்டுக்கள் இடையே
கண்சிமிட்டும் தூக்கம் கொண்டேன்..!!
குறட்டைச் சத்தம் மட்டும் குறைச்சல் அங்கே,
பாட வேலைகள் மாற மாற
பகல் கனவு மட்டும் குறைந்தபாடில்லை.,
சிறுகதை ஒன்றைக் கனவில் இயக்க
கதாபாத்திரமாய் என் பெயர் ஒலிக்க, அருகில் இருந்த
தோழன் ஒருவன் என் தோளைத் தட்டினான்..
கண் விழித்த போது அங்கிருந்த
கண்களெல்லாம் என்னை நோக்க
அதட்டல் குரலில் ஆசான் வார்த்தைகள் ..
என்ன தூக்கம் இந்த நேரம்...??
சொல்வதறியாது விழி பிதுங்கி நின்றிருந்த
என்னிடம் அவரே கேட்டார், என் நிலை தெரியாமல்..!
இரவு முழுதும் படித்தாயா என்று?
தலை மட்டும் ஆடியது தூக்கக் கலக்கத்தில்...!!

