உயிர் கொள்ளும் வன்மம்

சற்றும் எதிர்பாராமல் ஓர் வெகுமதி
என்றும் உன்னை மறக்கமுடியாதபடி
குற்றம் செய்யாமல் ஓர் தண்டனை
இனியும் உனை நினைக்க முடியாதபடி

விடிய விடியக் கதைகள் பேசினாய்
விடிந்தால் திருமணம் என்று சொல்ல மறந்தாய்
என் வெற்றிகளுக்கு எப்போதும் வாழ்த்துக்கள் என்றாய்
உன் மண நாளுக்கு வாழ்த்த என்னை அழைக்க ஏன் மறந்தாய்?


நீயில்லைஎன்றால் நான் ஏது என்றாய்
இன்று நீ இன்றி நான் ஏது சொல்வாய்
என்னை மணக்க மறுத்தால் உயிர் துறப்பேன் என்றாய்
உன் மணநாள் தெரிந்ததும் என் உயிர் போகுதே நான் என்ன செய்ய பதில் சொல்வாய்

எனக்குத் தெரியும் நீ சொல்லும் காரணங்கள் நிஜமில்லை
இருந்தும் உன் மனமாற்றத்தின் காரணம் புரியவில்லை
இப்படி ஒரு தண்டனை வழங்கத்தான் இத்தனை காலம் காத்திருந்தாயா
அப்படி உனக்கு ஏன் என்மேல் அத்துனை வன்மம்?

எழுதியவர் : mizhim (29-Sep-14, 2:08 am)
Tanglish : uyir kollum vanmam
பார்வை : 223

மேலே