அந்த நாட்கள்

மறக்க முடியாத நாட்களும்
மறக்க முடியாத நினைவுகளும்
காலங்கள் கடந்த பின்னும்
மனதிலே ஒரு காவியமாய்
இனித்துக் கொண்டேயிருக்கும்

இனிமையான கற்பனைகளையும்,
சுகமான கனவுகளையும் இதமாக
ஏந்திச் சென்ற இனிமையானதொரு
அடையாள அழகோவியம் அந்த நாட்கள்!

அன்று ஆரம்பித்த வேட்டை நாட்கள் !
வெளி உலகம் அறிய ஆரம்பித்த நாட்கள் !
நினைத்ததைச் செய்து, நிம்மதி கண்ட நாட்கள் !
அன்பைக் கொடுத்து வாழ்ந்த நெகிழ்வான நாட்கள் !
மழலை போல் சிறகடித்து சிட்டாய் பறந்த நாட்கள்!

எத்தனை அழகிய நாட்கள் அன்று.
என்றும் அழியாமல் மூச்சடக்கிக்
கிடக்கின்றன. கண்ணீரிலையே.

எழுதியவர் : (3-Oct-14, 12:23 am)
சேர்த்தது : அற்புதன்
பார்வை : 85

மேலே