குளு குளு அறையில்

என் செல்லமே..!
அந்த மழை நாளில் தான்
உன்னை முதல் முதலில்
பார்த்தேன்..
என் படிப்பு முடிந்த கையோடு..
ஒற்றைக் காலில் நின்று
உன்னை என் பெற்றோரின்
அனுமதியுடன்
சொந்தமாக்கிக் கொண்டு..
உன்னை ...
மெல்லிய
அணைப்போடும்..
கர்வத்தோடும்..
என் நண்பர்களின்
பொறாமை கண்களுக்கிடையில்
என் வீட்டுக்கு
அழைத்து வந்த நாள் முதல்
இன்று வரை..
என் தெருவில்
உன்னால் எனக்கு
தனி மரியாதை தான்!
எட்டாயிரம் கொடுத்து
வாங்கி வந்த
என் அழகு நாய்க் குட்டியே!
செல்லமே !
என்ன வேண்டும்..உனக்கு?
ஏ.சி.ரூமா?
குளு குளு அறை வேண்டுமென்றால்..
விழாதா எனக்கு ஒரு அறை?

எழுதியவர் : karuna (4-Oct-14, 10:14 am)
பார்வை : 162

மேலே