என்னவனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

என்னவனே...

என் அன்புக்கு முழுமையாக
சொந்தமான உயிரானவனே...

@@இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்@@

இன்று மலர்ந்த மலரெல்லாம்
உன்னை வாழ்த்திக்கொண்டிருக்கிறது
தென்றலில் தலை சாய்த்தபடியே....

அழகிய பல வண்ணங்களை கொண்ட
மலர்களும் வாழ்த்து சொல்லும் என்னவனுக்கு...

அடர்ந்த புல்வெளியில் படர்த்திருக்கும்
பனித்துளிகளும் வாழ்த்தும் என்னவனை...

என் இமைகள் உன்னை காண
தவமாய் தவமிருக்கிறது ....

இதழ்களும் வாழ்த்து சொல்ல
காத்துக்கொண்டிருக்கிறது என்னவனுக்கு...

என் பிறவி பலனை உணர்த்தேன்
உன்னில் மொத்தமாய் நான் தொலைந்ததால் ...

என்னை சுற்றி பலபேர் இருந்தாலும்
என் நினைவுகள் உன்னை சுற்றியே...

உன் தாய்க்கு என்றுமே குழந்தை தான்
உன் தாரம் எனக்கும் நீ குழந்தை தான்
நம் மரணம் வரை....

என் மடியில் தாலாட்டு பாடி
உறங்க வைக்க ஆசையடா
தினம் தினம் ...

தொலைவுகள் நம்மை பிரிந்தாலும்
நம் காதல் நினைவுகள் ஒரே
சுவாசம் தானடா...

உன்னை பார்க்க நினைக்கும்
நிமிடமெல்லாம் வலிகளுக்கு மட்டுமே
சொந்தமாகிறது என் இதயம்...

உன்னை காணமல் கண்ணீரில்
கோலமிடுகிறது என் விழிகள்....

உன் வரவை எண்ணி
ஒவ்வொரு நொடியும் காத்திருக்கிறேன்
நம் மணநாளை காண...

இன்று போல் என்றும் சந்தோசம்
உன்னில் நிலைத்திருக்க வாழ்த்துகள்
என் உயிரில் கலந்த என்னவனே...

என்னவனுக்கு
@@இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் @@

(என் மாமா மணிக்கு சமர்ப்பணம் )

எழுதியவர் : சகிமுதல்பூ (4-Oct-14, 2:31 pm)
பார்வை : 22160

சிறந்த கவிதைகள்

மேலே