ஏக்கம் என்று தீருமோ

ஏக்கம் என்று தீருமோ...???
**********************************
மணம் புரிந்தவன்
பணம் வேண்டி பரதேசம் போயின்
அவனில்லா ஏக்கம் தனை
அவன் வீட்டு தூணும் தீர்க்ககூடுமோ
கட்டியணைத்து கதறுகிறேன் அவர் நினைவில் ..!!
கட்டியவளை கண்டதும் கட்டியணைக்க
கை நீட்டினேன் , அவளும் தான்
ஏனோ இடையில் இவ்வளவு தடைகள்
இருப்பதை உணராது ,.,
ஒன்றும் முடியவில்லை எனினும் தொட்டணைத்து
அவன் தரும் முத்தம் தனை சத்தமின்றி
ஏற்றுகொள்கிறேன் சிறு சந்தேகத்துடன்
இம்முத்தம் எனக்கா கணினிக்கா..!!
கட்டிளம் காளையவன்
களையிழந்து கவிழ்ந்து போயினன்
வேலைப்பளுவை சுமக்க மாட்டாது
இல்லம் வந்து சேருகையில்...!!
பணம் வேண்டி போனவனின்
குணம் மாறிபோகவில்லை,
எனில் அவன் மனம் மாறிப்போக காரணம்
சூழ்ச்சிக்கார மனிதரின் வசைமொழிதான் போலும்...!!
யாரோ சொன்னதை வைத்து எனை
வெறுத்த இவனுக்காகவா இடர்களை
இன்முகம் கொண்டு ஏற்றேன்..?
எட்டிநின்று எனை ஏளனம் செய்யும்
பெண்மை இந்நிமிடம் இறந்தே போகட்டும் ....!!
காலம் கடந்து உண்மை புரியலாம் எனினும்
செயல்லிழந்து போய்விட்ட தேகமாய்
நின்று பார்வை பரிமாறும் இவர்கள்
உணர்வை ஒரு கவியில் வடிக்க
என்னால் முடியாது ,
இதுதான் புதுமண தம்பதிகளின்
புதுயுக நிலைமை....
எனவே ,
வலிகளோடு வாழப்பழகுங்கள்
.... அப்படியே
கொஞ்சம் வாதிடாதும் தான் ...!!!!!!!
இப்படிக்கு ,
Cathy