செல்லம் நீ

செல்லம் நீ!
நாய்கள் சூழ்ந்த உலகமோ.!.
தாய்தான் வீழ்ந்த சலனமோ!..
சேயென்ன பாவம் முடித்ததோ!—அய்யோ
சீயென தானே துடிக்குதோ.!
பேய்கள் போட்ட ஆட்டமோ!.
தாய்தான் ஏற்ற பாவமோ!..
பேயோ தாயோ ஏற்குமோ!.—பாவம்
சேயது சோகம் தீர்க்குமோ!..
மனமும் உளுத்த மனிதர்கள்
இனமும் பழித்த சனிதர்கள்.
தாய்மை மதியாத் தறுதலைகள்—இந்த
சேயின் விதியோ கடலலைகள்.
தாயும் தன்னை விற்றாளோ!
சேயும் உன்னைப் பெற்றாளோ!
வாய்தான் அழுதும் பிழைத்தாயோ—காமப்
பேய்தான் உழுதும் முளைத்தாயோ!
தொட்டிக் குழந்தை இழிவில்லை
தொட்டில்க் குழந்தை பழியில்லை.
அரசு தானே அம்மாவாம்.—உன்னைப்
பரிசெனத் தாலாட்டிப் பெற்றாளோ!
எந்த சொந்தம் நீயம்மா?
அந்த பந்தம் தாயம்மா!.
குப்பை இல்லை சிரியம்மா.—அந்த
தப்பை செய்தவள் விதியம்மா. .
அன்னை உன்னை விடுவோமா?
மண்ணை வீணே படுவோமா?
தன்னைத் தானே கெடுவோமா?---அம்மா
முன்னைத் தமிழே மடியில்வா!
அம்மா தமிழே வருவாளோ!
அள்ளிக் கண்ணால் பெறுவாளோ!
இம்மா நிலத்தின் செல்லம் நீ!—இங்கு
இல்லை எவரும் அனாதை யே!
கொ.பெ.பி.அய்யா.