நீ பேசாவிடினும்

‘சாப்பிட்டாயா’வென

வேளைக்கொரு முறை விசாரிப்பு..

‘எங்கே இருக்கிறாய்’ என

மணிக்கொரு தரம் கண்காணிப்பு..

மனநிலையறியத் துடிக்கும்

ஒருவித தவிப்பு..

எதையேனும் பகிர்கையில்

தோன்றும் பூரிப்பு..

இவையேதும் இல்லாவிடினும்

ஒன்றும் மாறப்போவதில்லை..

கவனிப்பார் இன்றியும்

வளரும் நகத்தினைப் போல்..

பேசாமலிருந்தாலும்

பெருகும் நேசம்..

எழுதியவர் : Karunabalan (14-Oct-14, 2:13 pm)
பார்வை : 102

மேலே