கருனபாலன்(தீபக்) - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f0/zpwex_4755.jpg)
![](https://eluthu.com/images/roles/creator.png?v=6)
எழுத்தாளர்
இயற்பெயர் | : கருனபாலன்(தீபக்) |
இடம் | : Native: Cuddalore Working at: Qatar |
பிறந்த தேதி | : 09-Jan-1983 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 09-Jun-2011 |
பார்த்தவர்கள் | : 256 |
புள்ளி | : 36 |
My name is Deepak. Working as Mechanical Engineer in Qatar. Please give your Suggestions and corrections in the id below
deep.n.deepsi66@gmail.com
கருவரையில் தனி அணுவாய் மீண்டும் ஒரு முறை நுழைந்திட ஆசை....
தாய் முகம் முதல் கண்டு அவள் வாசம் நான் உணர்ந்து மீண்டும் ஒரு முதல் கண்ணீர் உதிற்றிட ஆசை....
ஆறாம் மாதம் தரையில் புரண்டு ஏழாம் மாதம் திரும்ப கவிழ்ந்து மீண்டும் ஒரு முறை தவழ்ந்திட ஆசை...
தந்தை கை பிடித்திழுக்க தாயின் கை வரவேற்க மீண்டும் ஒரு முறை நடை பழக ஆசை....
அது பழகி சில நாளில் நானாக
நடை தொடங்கி மீண்டும் ஒரு முறை விழுந்து எழ ஆசை....
மழை தூரும் சாரலில் மண் வாசம் அதை விரும்பி மீண்டும் ஒரு முறை சேற்றில் அழுக்கு பட ஆசை. . . .
தோழன் வாய் திறக்க ஆசிரியர் தடி எடுக்க மீண்டும் ஒரு முறை முட்டியிட ஆசை......
பொய்களை
நீ என்னை
நெருங்கும் நேரங்களில்
இதயம் ஓரடி
விலகி நிற்பதை
மனம் விட்டுச் சொல்ல வந்து
சிதற விட்ட
வார்த்தைகளைத் தேடுகிறேன்
உதிர்ந்த பூச்சரங்களின் நடுவிலும்
மறைத்த திரைச் சீலையின் மறைவினிலும் .....
மூன்று முடிச்சிட்டாய்
மூச்சைத் தவிர
அனைத்தும் உன் கரங்களில்..
புது மஞ்சள்
தெறித்த வட்டங்கள்
வெறுமைகளால்
வலியச் சிக்கியபடி...
பிடிக்குமெனச் சொல்லியே
பெயரிட்டழைக்கிறாய்
பிடிவாதங்களை ...
உன் செய்வன செய்யக்கூடாதவை
பட்டியல் ஆயுள்முழுதும்
என்னைச் சுற்றியோ ?
உன்னில் சரிபாதி கேட்கவில்லை
என்னை அப்படியே ஏற்றுக்கொள்ள
முழுதும் விற்கப்படவில்லை நான் !
பிடிக
நாளைய சமுதாயம்
நாம்தான்..
வல்லரசாகும்
நாளைய சமுதாயம்
நம்மால்தான்....
நாமே நமக்கு
பகையாகினோம்...
பாதைமாறி பயணம் போகலானோம்...
மதி சிறந்து
பிறந்தும் கூட,
மதி இழந்த மூடர்களாக
நாமாகினோம்...
பொழுதுபோக்கிலேயே
பொழுதுகளை
போக்குவோர் சிலர்...
சினிமா மோகத்தால்
பித்து பிடித்த பக்தனாய்
கட் அவுட்டுக்கு
பாலபிசேகம் எடுப்போர் பலபேர்...
நாகரீகமென சொல்லி
எல்லை மீறிய
அநாகரீக செயல்களிலும் ,
அரை குறை ஆடையிலும் ,
அலைகிற இளைய சமுதாயம் ,
அலைபேசியே உலகமென
அத்தியாவசிய தேவையென
வெட்டிப்பேச்சில் மூழ்கி கிடக்கிறது...
மங்கையரில் சிலர்
அழகு நிலையங்களில் குடிகொள்ள ,
ஆடவர
பதிவுத்திருமணம்
~~~~~~~~~~~~~~~~~
அன்னையிடம் சம்மதம் கேட்டான்
அவள்மீது சத்தியம் கூடாது என்றாள்
தந்தையிடம் கேட்டான் வேறு ஜாதி என்றார்
இறுதியில் அவனே சென்றான்
அவளுடன் பதிவு அலுவலகத்திற்கு
இரண்டு மாலைகள் இரண்டு நண்பர்கள்
ஒற்றைக் கயிறுடன் இனிதே முடித்தான்
திருமணம் முடிந்து வீடு திரும்பியபோது
இருஜோடி மாலைகள் மிகுதியாக தேவைப்பட்டது
ஒருஜோடி அவனது பெற்றோருக்கும்
மற்றொன்று அவளது பெற்றோருக்கும்
அவன் கட்டிய கயிறில் நெரித்துக்கொண்டே
தன்னை மாய்த்துக்கொண்டாள் அவள்
தண்டவாளம் சென்றே தானும் தலை இழந்தான்
- கற்குவேல் . பா
மழை இரவில் நடைப்பயணம் உன்னோடு-வித்யா
ஒளியின் நிழலாய்
மங்கிய இரவு
மெளனமாக நான்
வார்த்தைகளோடு நீ
மேடும் பள்ளமுமாய்
நமக்கான பாதை.......!!
மூச்சிரைக்க மூச்சிரைக்க
முதலுதவிக் கேட்டுக்
காற்று......
முன்னறிவிப்பின்றி
எதிர்பாரா முத்தம்தரும்
நமக்கான மழை.......
முன்னிரவில்
விண்வெளியில்
தன்னைத்
தானேப்பதுக்கும்
நிலா.....
வழிநெடுகிலும்
வானம்மூடிக்
கிளைப்பரப்பிக்
காத்திருக்கும்
மேகம்.......
வானவில் சிறகுகள்
வானின் கரு"மை"யில்
நனைத்து என் பெயர்
தீட்டிக் கொண்டிருக்கும்
உன் இதழ்கள்.......
பார்வை நீட்சிகளின்
விருப்பமில்லா உராய்வுகளில்
தீப்ப
பண்டிகைக்காய் வாங்கி வைத்த புத்தாடை தனை உடுத்த
வாங்கிய நாள் முதலே பார்த்தேங்கிய எண்ணங்கள்...
திருநாளின் முன்னிரவே வெடி அனைத்தும் வெடித்துவிட
தடதடவென வத்தியோடு இங்கும் அங்கும் ஓடிய கால்கள்..
அங்கொன்றும் இங்கொன்றுமாய் இரவிலும் கேட்கும் வேட்டு சத்தத்திற்கு
பொருளிருந்தும் கீழே வைத்து காதுகளை பொத்திய கைகள்..
புதிய திரைப்படம் ஒன்று தொலைகாட்சியில் ஓடும்போதும்
வெடி சத்தம் கேட்கையிலே எனை அறியாது சிமிட்டிய கண்கள்..
ஒற்றை வெடியில் கற்றை காகிதம் சுற்றி வீட்டு வாசல் முன் வெடித்து
பெரும் குப்பை சேர்த்து வைத்து நிறைய வெடி வெடித்ததாக பெருமைகள்...
சூரியன் இல்லாத ஒளிக்கதிர்...
பிறையும் இல்லா பௌர்ணமி...
100 டிகிரி தென்றல்...
நதி தீண்டா கரை...
கண்ணீர் இல்லா அழுகை...
இதயமற்ற உயிர் துடிப்பு...
சிவப்பணுக்கள் இல்லா இரத்தம்...
இமைகள் இன்றி உறக்கம்...
கண்கள் இன்றி கனவு...
உண்ணாமல் ஆறிவிடும் பசி...
இவை தான்- நீ என் அருகில் இல்லாததை அறிந்தும்
சௌக்கியமா என எவர் வினவினாலும்..
என் புன்னகை உரைக்கும் உதாரணங்கள்.
கருவறையோ யாரோடும் வருவதில்லை..
கல்லறைக்கு செல்லும் நாள் தெரியவில்லை..
என்னோடு மணவறையில் என்றமர்வாய்-உந்தன்
மன அறையை திறந்தின்று வாய்மொழிவாய்...
சில்லறையாய் பேசியதாய் நினைத்துவிட்டால்...
ஒரு முள்ளறையில் நீ என்னை அடைத்திடுவாய்..
புல் தரையில் கிடந்திங்கு உழல்கின்றேனே -அன்பே
தினவொடித் தென் கனவறையின் தாழ் திறவாய்...
ஒரு நாள் பெய்யும் மழைக்காய் வானம் பார்த்துக் காத்திருக்கும் வனத்தைப் போல...
ஒரு சிசு பிரப்பதர்க்காய் பத்துத்திங்கள் சுமைதாங்கிக் கிடக்கும் தாயவள் போல..
ஸ்பரிசம் பட சுருங்கிவிடினும் நின் தீண்டலுக்காய் காதிருக்கும் தொட்டாசுருங்கியைப் போல..
வெற்றுப் பாதம்பட நீ அமர்ந்து கொலமிடுவாயென மார்கழிக்காய்க் காத்திருக்கும் தெருவைப் போல...
கூந்தல்நுனி நீர்த்துளி படுவதற்காய் நீ தலை துவட்டக் காத்திருக்கும் அரை சுவரைப் போல...
புன்முருவ நாணத்தால் சரி என நின் இமைகள் தரும் ஒற்றை அசைவுக்காய் காத்திருக்கிறேன்...
ஏர்முனை கொண்டு அகழ்ந்தாலும் நெல் தந்து பசி அகற்றும் நில மகளைப் போல...
உன் மனமுழுது ம
மாமரத்து கிளையினிலே
கயிறு கட்டி வீட்டிலுள்ள
பலகை எடுத்து ஊஞ்சலடினோம் ..
வேப்பம் காய் துணைக்கொண்டு
கீறி கிழித்து கையில்
எழுதி மண்ணிட்டு மகிழ்ந்தோம் ..
வீட்டு திண்ணையையே மேடையாக்கி
ஆடலும் பாடலும் நடித்தும்
இனிதாய் களித்தோம் ..
காலத்திற்கு ஒரு விளையாட்டு
தாயமும் ,நொண்டியும், பல்லாங்குழியும்
என பொழுதை கழித்தோம் ..
எப்போதும் பலர் கூடி
ஒருமித்து விளையாடி
அப்படியே இருந்துவிட்டோம் ...
இன்று கணினியோடு விளையாட
நம்சந்ததி பழக்க அவர்களுக்கு
எல்லாம் இயந்திரமாய் தெரிகிறதோ ?
எப்போதும் ஜெயிக்கும் எண்ணம்
ஓங்கியே தோல்வி தாங்க
முடியாமல்
நண்பர்கள் (20)
![ஆரோ](https://eluthu.com/images/userthumbs/b/khrml_10711.jpg)
ஆரோ
விழுப்புரம்,(சென்னை)
![முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்](https://eluthu.com/images/userthumbs/f3/qliou_30127.jpg)
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
![வேஅழகேசன்](https://eluthu.com/images/userthumbs/b/bgcsz_16464.jpg)
வேஅழகேசன்
ஈரோடு
![துளசி](https://eluthu.com/images/userthumbs/f2/lwfyg_29025.jpg)
துளசி
இலங்கை (ஈழத்தமிழ் )
![user photo](https://eluthu.com/images/default-user-thumb.jpg)