அன்பே தாழ் திறவாய்

கருவறையோ யாரோடும் வருவதில்லை..

கல்லறைக்கு செல்லும் நாள் தெரியவில்லை..

என்னோடு மணவறையில் என்றமர்வாய்-உந்தன்

மன அறையை திறந்தின்று வாய்மொழிவாய்...

சில்லறையாய் பேசியதாய் நினைத்துவிட்டால்...

ஒரு முள்ளறையில் நீ என்னை அடைத்திடுவாய்..

புல் தரையில் கிடந்திங்கு உழல்கின்றேனே -அன்பே

தினவொடித் தென் கனவறையின் தாழ் திறவாய்...

எழுதியவர் : கருனபாலன் (20-Oct-14, 11:01 am)
சேர்த்தது : கருனபாலன்(தீபக்)
பார்வை : 92

மேலே