சொல்லிவிடு வார்த்தை ஒன்று

உயிரே ...
என்னை பிடிக்கவில்லையெனில்
சொல்லி விடு என்னிடம் ....
அன்பே...
இனி என் நினைவுகளும் நிழலும்
உன்னை தொடராது ...
உயிருடன் இருப்பதை
கூட விரும்பவில்லை ...
என் மனம்...
உண்மை காதல் வெறுத்துவிடுமோ.
சந்தேகம் என்னுள்...
உன் மௌனத்திற்கு அர்த்தம்
உணரமுடியவில்லை என்னால்...
உரிமையாக என்னிடம்
பேச மறுக்கிறாய்...
காரணம் கேட்டால் யாரடி நீ என்கிறாய்?
என்னிடத்தில் உரிமையும் இல்லை...
உண்மையும் இல்லை நீ...
என்னை முழுமையாக
வெறுத்து விட்டாய் ..
வெறுத்துகொண்டே இருக்கிறாய்...
வெறுத்து விடு ...
எதுவென்றாலும் சம்மதமே...
நான் இன்றி உன் வாழ்க்கை
சந்தோசமாக அமையுமெனின்
எனக்கு சம்மதமே
உன்னை விட்டு விலக...
உன் எண்ணம் போலவே
உன் இல்லற வாழ்க்கை அமைய
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...