செவ்விதழ் சிரிப்பு
செவ்விதழ் கொண்டு சிரிக்கின்றாய் என்னவளே.
உன் சிரிப்பு கண்டு சுருங்குதடி - என் நெஞ்சம்
விரிந்த ரோஜா இதழ்போல் உன் சிரிப்பால்
நிலைகுலைந்து போனதடி – என் நெஞ்சம்.
மலர்ந்த முகம் கண்டு மயங்குதடி என் நெஞ்சம்.
அந்நொடியே நான் அடைந்தேன் உன்னிடத்தில் – தஞ்சம்.
மகரந்தத்தில் மயங்குகின்ற வண்டைப்போல
உன்னழகில் மயங்குகிறது – என் நெஞ்சம்.
மலர் மூட சிக்கிக்கொண்ட வண்டு போல
உன்னழகில் சிக்கித்தான் தவிக்கின்றேன்.
மூடிய மலரில் இறக்கும் வண்டை போல – நானும்
இறப்பதற்கு முன் சொல்வாயே உன் காதலை.