விளக்கணி - தீபாவளி

விளக்கணித் திருநாள் எதற்கு
புத்தாடை உடுத்தி
இனிப்பு வழங்கி
மகிழ்வதற் காகவா?
பட்டாசெனும் கொடியோனைக் கொளுத்தி
சுவாசத்தினை நிறுத்தி
செவியினைச் செவிடாக்கி
துன்புறுவதற் காகவா?
நராகா சுரனெனும்
தமிழன் வீழ
நகைக்கும் நயவஞ்சகன்
கொண்டாடும் நாளை
தமிழனே கொண்டாடி
மகிழ்வதற் காகவா?
சிந்தனைசெய் தமிழனே
சிந்தனைசெய் உந்தன்
திருநாள் எதுவென? உன்நலநாள் எதுவென? (கலித்தாழிசை)

எழுதியவர் : நேயக்கோ (19-Oct-14, 3:34 pm)
சேர்த்தது : சத்தியராஜ்
பார்வை : 99

மேலே