+உள்ளம் அழும் குரல்+
கண்டு கொள்ளாமல் போகும்
உன்னை கண்டு கண்டு
இந்த உள்ளம் அழும் குரல்
உனக்கு கேட்கிறதா...
நான் குழந்தையாய் இருந்திருந்தால்
ஒரு லாலிபாப்போ ஒரு அன்பு முத்தமோ
என்னை சரிகட்டியிருக்கும்...
இன்று
குமரனாகிவிட்டதால்
இப்போது ஒன்றும்
குறைந்து போகவில்லை...
நான் லாலிபாப்பெல்லாம்
கேட்கமாட்டேன்...
ஒரே ஒரு
முத்தம் மட்டும்
கொடுத்து போய்விடு...