துப்பாக்கி--------அஹமது அலி-----

கற்கால கத்திகள்
மன்னர்கள் வீரம் மெச்சிய வாள்கள்
இன்னும் சிலபல ஆயுதங்களை
ஓரங்கட்டியவன் நான்...!

............︻╦̵̵͇̿̿̿̿╤── }-}-}-}-}-}-}-}-}-}-}

ஆஜானுபாகுவான வீரன்
எதற்கும் அஞ்சா நெஞ்சம் படைத்தவன்
எவனாயிருந்தாலும் அவனுயிர் காக்க
கைகளுயர்த்தி என் முன்
சரணடைய வேண்டும்....!

............︻╦̵̵͇̿̿̿̿╤── }-}-}-}-}-}-}-}-}-}-}

நெஞ்சை நிமிர்த்தினால்
வஞ்சம் தீர்ப்பேன்
நெஞ்சை துளைத்து
கொஞ்சம் குருதி ருசிப்பேன்...!

............︻╦̵̵͇̿̿̿̿╤── }-}-}-}-}-}-}-}-}-}-}

அஞ்சாமை கொண்டவன் நான்
அச்சம் கொண்டவனின் கரங்களுக்கு
வீரம் கற்றுத் தருவேன்
என்னை கரம் பற்றியவனுக்கு
நான் பாதுகாவலன்...!

............︻╦̵̵͇̿̿̿̿╤── }-}-}-}-}-}-}-}-}-}-}

எதிர் நிற்பவர் எவரும் எதிரியே
கண்ணிருந்தும் ஆள் பார்ப்பதில்லை
மூக்கிருந்தும் மனிதம் நுகர்வதில்லை
தோட்டா இருக்கும் வரை சரவெடி
தோட்டா தீர்ந்தால் செத்த பாம்படி...!

............︻╦̵̵͇̿̿̿̿╤── }-}-}-}-}-}-}-}-}-}-}

உயிரெடுப்பது குலத்தொழில்
இரத்தமென் தாகசாந்தி
நீண்டிருக்கும் மூக்கு
பிணவாடை நுகர்வதற்கே..!

............︻╦̵̵͇̿̿̿̿╤── }-}-}-}-}-}-}-}-}-}-}

சட்டம் ஒழுங்கும் கட்டிக் காப்பேன்
சட்ட மீறலும் கடை பிடிப்பேன்
காவலர்க்கும் நான்தான் காவல்
காளிகள் கை சேராதிருப்பதே என் ஆவல்..!

எழுதியவர் : அஹமது அலி (21-Oct-14, 10:47 am)
பார்வை : 446

மேலே