புல்நுனி பனித்துளி காதல்
புல்நுனி பனித்துளி
காதல் போல்
புவிதனில் உண்டோ
வேறேதும்..
பிரிவு வேண்டாம்
என்பது போல்
காதல்ரசம் கொட்டிடுதே
கண் பார்க்கையிலே...
காலை கதிரவனும்
கண்விழித்து விட்டானே
அவனையும் கலந்துகொள்
என்றேன் இவர்களை கவிவடிக்க
எங்கள் கண்பட்டதோ
அவர்கள் காதலுக்கு...
கணப்பொழுதில் மறைந்ததுவே
பனித்துளி.......