கடை நிலை வரிகள்
என் கவியின் கடை நிலை வரிகளுக்கு
வார்த்தை இல்லை என்னிடம்
இருந்த வார்த்தைகளும்
ஆள் அரவமற்ற
வறண்ட பாலைவனத்தின் கடை கோடிகளில்
எங்கோ ஓடி ஓளிந்து கொண்டுவிட்டன
வற்றி போன கேணி
என நானும் விழி பிதுங்க
முற்று புள்ளி வைக்கும் முன்பே
முற்று பெறாமல் நிற்கிறது .....