கல்லாகி விட்ட கடவுள்
கருவரை
தொடங்கி கல்லறை
வரையில்
கண்ணீர் சிந்தும்
பெண்
இனத்தின்
காயங்கள் கண்டு
கடல் அலைகள்
கூட
குமுறுகிறது
ஆனால்
கடவுள் என்ற
பெயரில்
கல்லாக இருப்பவன்
கண்மூடி
தூங்குகின்றான்.....

