என் காதல்போட்டிக்கவிதை

எனக்காக எதுவுமே இல்லை
என்று நானிருந்த வேளை
எனக்கான எல்லாவுமாய் வந்த
முதல் அன்பு
என் காதல்....

அதுவரை ரசித்ததில்லை
எதையும் நான்
அக்கணமே ரசிக்க ஆரம்பித்தேன்
என்னையே நான்....

என் உயிரின் உருவம்
எதிரே கண்டேன் !
மெய் சிலிர்த்து
நான் நின்றேன்....

விலக நினைத்த
நிமிடங்களில்,
விரும்பி நடந்தேன் ..
என் காதலின்
கரம் பிடித்து...

மறுமுறை பிறந்தேன் !
புதிதாக..
கருவறை சுகத்தை
மீண்டும் தந்த
என் காதலால்...
கல்லறை நான் சேரும் வரை
இதயக் கருவில்
பூத்திருக்கும் என்
காதல் பூக்கள் உதிராமல்
ஆதலால்....

அன்பின் தேடலுக்கு
எல்லை இல்லை..
என் தேடலுக்கு,
இமை படித்ததால்
மனம் பறித்த
என் காதலே
எல்லை....

என் காதல்
விட்டுக்கொடுக்க
கற்றுத்தந்தது ...
அதில் கூட
சுகம் இருப்பதை
மனம் உணர்ந்தது...
அர்த்தமுள்ள உணர்வின் தேடலுக்கு
அடையாளம் தந்தது...

நம்பிக்கை தந்து
நிமிடங்களை வெல்ல செய்த
என் காதல்,
நான் வாழ்க்கையோடு சேரும் முன்
எனை வலியோடு சேர்த்தது....
சற்று பிரிந்து சென்று...

வலியானாலும்
நான் ரசிக்கிறேன் !
தருவது என்
காதல் என்பதால்...

என் முதல் சொந்தம்
எனக்கான முழு சொந்தம்
நான் கொண்ட
என் காதல்...


ஆயுள் உள்ளவரை
அழகாய் பூத்திருக்கும்
ஆழமான
என் காதல்
நெஞ்சத்திலே.....


சீ. கவிதா

எழுதியவர் : சீ. கவிதா . முதுகலை உளவியல் (26-Oct-14, 10:35 am)
பார்வை : 152

மேலே